செய்திகள் :

கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட்! மேலும் 6 மாவட்டங்களில் கனமழை!

post image

கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும்(மே 27) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கேரளத்தில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவியுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த இரு நாள்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்றும் தொடருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும்(மே 27) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல்லை, தென்காசி, தேனி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும்

திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை(மே 28) கோவை, நீலகிரியில் மிக கனமழையும் நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இபிஎஸ்ஸுக்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை: மு.க. ஸ்டாலின்

"கலைஞரின் பேனா" புத்தகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதிய "கலைஞரின் பேனா” நூலினை புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூலாசிரியர் பேராசிரி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பு: கனிமொழி எம்.பி கருத்து

தமிழகக் காவல்துறை விசாரித்த அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வழக்கை நடத்திய லட்சணத்தையும் குற்றவ... மேலும் பார்க்க

சென்னையில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் பெற புதிய டிஜிட்டல் முறை!

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றிட ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக பெருநகர சென்னை மா... மேலும் பார்க்க

அத்திக்கடவு குடிநீரில் சாக்கடை கலப்பு: அரசூர் கிராம மக்கள் அவதி

கொள்ளுப்பாளையம் பகுதியில் அத்திக்கடவு குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருகிறது. துர்நாற்றத்துடன் புழுக்களும் கலந்து வரும் இந்த நீரால் கிராம மக்கள் சிரமத்து ஆளாகியுள்ளனா். பலரே உடல்நலக் குறைவால் பாதி... மேலும் பார்க்க

நொய்யல் ஆற்று நீரை மலர் தூவி வரவேற்ற எஸ்.பி.வேலுமணி

தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தென்னமநல்லூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் ஒய்யாரமாக பொங்கி வரும் தண்ணீரை மலர் தூவி முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரவேற்றார்.கோவை மாவட்டத்தின் மே... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றங்களையும் திமுக அரசு சகித்துக்கொள்ளாது! - ஆர்.எஸ். பாரதி

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ... மேலும் பார்க்க