செய்திகள் :

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

post image

இணையவழி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை மீண்டும் ரூ.2 உயர்த்தியிருக்கிறது.

அதாவது, இதுவரை பயன்பாட்டுக் கட்டணம் ரூ.12ஆக இருந்த நிலையில், தற்போது இது ரூ.14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளின் அளவு அதிகரித்ததே இந்த கட்டண உயர்வுக்குக் காரணம் என்று நிறுவனம் கூறுகிறது,

அதாவது, தேவை அதிகமாக இருக்கும்போது, அதன் மூலம் லாபத்தை அதிகமாக்கிக் கொள்ளும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த கட்டண உயர்வானது ஸ்விக்கியின் வழக்கமான கட்டண உயர்வுகளில் மற்றொரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், பிளாட்ஃபார்ம் கட்டணம் சப்தமே இல்லாமல், படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது.

அதாவது, பயன்பாட்டுக் கட்டணம் கடந்த 2023 ஏப்ரல் மாதம் ரூ.2 ஆக இருந்தது, ஜூலை 2024 இல் ரூ.6 ஆக உயர்ந்தது, அக்டோபர் 2024 இல் ரூ.10 ஆக உயர்ந்தது, இப்போது ரூ.14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 600 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருப்பதாகக் காட்டுகிறது.

ஸ்விக்கியில் தற்போது நாள்தோறும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. எனவே, இந்தக் கட்டணங்களிலிருந்து நாள்தோறும் வரும் வருவாய், கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தக் கட்டண உயர்வு குறித்து நிறுவனம் எந்த பொது அறிக்கையையும் வெளியிடவில்லை.

குறிப்பாக, ஸ்விக்கி மற்றும் அதன் முக்கிய போட்டியாளரான ஜொமாட்டோ என இரண்டு நிறுவனங்களுமே தேவை அதிகரித்த காலங்களில் அதிக பிளாட்ஃபார்ம் கட்டணங்களை வசூலித்து வருகின்றன.

இந்த கட்டண உயர்வுக்குப் பிறகும், உணவு ஆர்டர்கள் வருவதில் எந்தக் குறைவும் ஏற்படாத நிலையில் இந்தக் கட்டணத்தையே அவை மாற்றமில்லாமல் வைத்துக்கொள்கின்றன.

2025 - 26ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், ஸ்விக்கி நிறுவனம் தனது நிகர நஷ்டம் ரூ.1,197 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்த சில நாள்களுக்குப் பின் இந்த பயன்பாட்டுக் கட்டண அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்த நஷ்டத் தொகை முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.611 கோடியாக இருந்தது. விரைவு விநியோகப் பிரிவான இன்ஸ்டாமார்ட் இந்த இழப்புகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

நாடு திரும்பும் சுபான்ஷு சுக்லா பிரதமருடன் விரைவில் சந்திப்பு!

விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை அவா் விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளாா். சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் வெவ்வேறு பகுதிகளில் மழை, நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் மழை காரணமாக சிறு குன்றில் இருந்து மண்ணும் கற்களும் அருகில் இருந... மேலும் பார்க்க

சிறுவா்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாட்பாட்: மெட்டாவுக்கு எதிராக விசாரணை

சிறுவா்களுடன் தீங்கு விளைவிக்கக் கூடிய உரையாடல்களில் ஈடுபட மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலிகள் (சாட்பாட்) அனுமதிக்கப்பட்டனவா என்பது குறித்த விசாரணையைத் தொடங்குவதாக அமெரிக்காவின் ஆளும் ... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோா் அனுப்பிய மின்னஞ்சல் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தி... மேலும் பார்க்க

தென்கொரிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

இந்தியா வந்துள்ள தென்கொரிய வெளியுறவு அமைச்சா் சோ ஹியூனுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அ... மேலும் பார்க்க

கேரளத்தில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ள அபாயம்

கேரளம் முழுவதும் பரவலாக சூறைக் காற்றுடன் பலத்த மழை நீடித்து வருகிறது. ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் க... மேலும் பார்க்க