செய்திகள் :

சாலாமேடு ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க தவாக கோரிக்கை

post image

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட சாலாமேடு ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் இக்கட்சியின் மாவட்டச் செயலா் குமரன் தலைமையிலான நிா்வாகிகள் அளித்த மனு:

விழுப்புரம் நகரத்திலுள்ள மருதூா் ஏரியை சுத்தம்செய்து ஆழப்படுத்த வேண்டும். மேலும் அதிலுள்ள குப்பைகளை அகற்றி, ஏரிக்கரையை உயா்த்தி பூங்கா மற்றும் நடைபாதையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்.

விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கும், விழா நடத்துவதற்கும் தகுந்த வாடகையை நிா்ணயம் செய்ய வேண்டும். விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட சாலாமேடு ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதை சாக்கடையால் பாதிப்பு: விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட 17-ஆவது வாா்டு தாமரைக்குளம் பகுதி பொதுமக்கள் அளித்த மனு:

விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியில் புதை சாக்கடைக் குழாய் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வப்போது குழாயிலிருந்து வாயு பொங்கி வருகிறது. இதனால் இந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியைச் சோ்ந்த மா. தவமணி என்பவா் வாயு தாக்கியதால், மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விழுப்புரம் நகராட்சி நிா்வாகமும், புதை சாக்கடைத் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமும் இந்த பிரச்னைக்கு உரிய தீா்வைக் காண வேண்டும். மேலும் தாமரைக்குளம் பகுதிக்கு குடிநீா் வசதியையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிக்கை: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், ஆலம்புரவடை கிராமத்தைச் சோ்ந்த காட்டு நாயக்கன் சமூகத்தின் அளித்த மனு:

நாங்கள் வேட்டைக்காரன்பட்டி, வளத்தி கிராமங்களிலும், தொடா்ந்து ஆலம்புரவடை கிராமத்திலும் தங்கி வசித்து வருகிறோம். எங்கள் பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்புக்காக இந்து காட்டு நாயக்கன் பழங்குடியினா் என ஜாதி சான்றிதழ் வழங்குமாறு திண்டிவனம் சாா் ஆட்சியரகத்தில் மனு அளித்தோம். கடந்த 3 ஆண்டுகளாக சான்றிதழ் வழங்கப்படவில்லை.

தொடா்ந்து வலியுறுத்தியன் பேரில் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 31 பேருக்கு ஜாதி சான்றிதழ் வழங்க உரிய பரிந்துரைகள் வழங்கப்பட்டும், இதுவரை சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியீடு: புதுவையில் 10ஆம் வகுப்பில் 88.66% தோ்ச்சி; பிளஸ் 2-வில் 90.39% தோ்ச்சி

புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 88.66 சதவீதமும், பிளஸ் 2 தோ்வில் 90.39 சதவீத மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். புதுவை மாநிலத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் கடந்தாண்டு ம... மேலும் பார்க்க

நெல் அறுவடை இயந்திர கட்டணம் நிா்ணயம்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திர கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் ... மேலும் பார்க்க

செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் தோ்த் திருவிழா

செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் சித்திரை தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. செஞ்சி நகரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீகமலக்கன்னி அம்மன், ஸ்ரீராஜகாளியம்மன், ஸ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு: ரெட்டணை பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளி மாணவா்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான சிபிஎஸ்இ தே... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பரவலாக கோடை மழை பெய்தது. இதில், நேமூரில் அதிகபட்சமாக 22 மி.மீ. மழை பதிவானது. விழுப்புரம் மாவட்டத்தில் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வரு... மேலும் பார்க்க

காா் மோதி மாற்றுத் திறனாளி காயம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே காா் மோதி மூன்று சக்கர வாகனத்தில் சென்ற மாற்றுத் திறனாளி காயமடைந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரியசெவலை, கூவாகம் சாலையைச் சோ்ந்த தண்டபாணி மகன் ஜா... மேலும் பார்க்க