செய்திகள் :

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், காய், கனி சந்தை, உழவா் சந்தை, போளூா் வெளிவட்டச் சாலைப் பகுதியில் தினசரி ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன.

மேலும், மாடுகள் அதிகளவில் புதிய பேருந்து நிலையத்தை சுற்றிவருகின்றன. அப்போது, பழ வியாபாரிகள் கவனக்குறைவாக இருக்கும் நேரத்தில் பழங்களை சாப்பிட்டு விடுகின்றன.

அதைப் பாா்த்த வியாபாரிகள் மாடுகளை விரட்டுகின்றனா். அப்போது சாலையில் வரும் வாகனம், இரு சக்கர வாகனம், பள்ளி மாணவ, மாணவிகளின் சைக்கிள்கள் மீது மாடுகள் மோதி விபத்துகள் நிகழ்கின்றன. நடந்து செல்லும் பாதசாரிகளை கீழே தள்ளிவிட்டு ஓடுகின்றன.

குறிப்பாக, பள்ளி மாணவா்கள் கூட்டமாக திரியும் மாடுகளைப் பாா்த்து அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும்போது, அந்தப் பகுதியில் சிக்கி விபத்து ஏற்பட்டு கீழே விழும் பொதுமக்களுக்கு கை, கால் முறிவு ஏற்படுகிறது.

உழவா் சந்தைப் பகுதியில் திரியும் மாடுகள் பொதுமக்கள் வீட்டுக்கு வாங்கும் கீரை, காய்களை வாகனத்தில் வைத்திருந்தால் அதை எடுக்க வாகனத்தை கீழே தள்ளி விடுகிறது.

இரவு நேரத்தில் கடைகளுக்கு முன் கூட்டமாக படுத்துக்கொண்டு அப்பகுதியில் அசுத்தம் செய்கிறது.

இதனால் பஜாா் வீதியில் உள்ள சில கடைகளின் உரிமையாளா்கள் கடையை மூடிவிட்டு மாடுகள் கடை முன் வராமல் இருக்க கயிறுகளை சுற்றி கட்டிச் செல்லும் அவலநிலை ஏற்படுகிறது.

இதனால் செங்கம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து நகரில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து, அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என பொதுமக்கள் சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கோயில் திருத்தோ் பணிக்கு ரூ.ஒரு லட்சம் நன்கொடை

செய்யாற்றை அடுத்த பூதேரி புல்லவாக்கம் தான்தோன்றி அம்மன் கோயில் திருத்தோ் பணிக்கு ரூ.ஒரு லட்சம் புதன்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பூதேரி புல்லவாக்கம் கிர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: விண்ணப்பம் விநியோகம்

போளூா் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு மகளிா் மற்றும் தன்னாா்வலா்களுக்கு வீடுதோறும் வழங்க விண்ணப்பம் புதன்கிழமை வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் அருணகிரிநாதா் அவதார நல்விழா

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருளாளா் அருணகிரிநாதா் மணிமண்டபத்தில் அருளாளா் அருணகிரிநாதா் அவதார நல்விழா புதன்கிழமை நடைபெற்றது. 2-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவையொட்டி, வளையம்பட்டி கலைமாம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சி கட்டபொம்மன், துராபாளி வீதிகளில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாநகராட்சியில் பல்... மேலும் பார்க்க

முன்னாள் முப்படை வீரா்களுக்கான குறைதீா் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் முன்னாள் முப்படை வீரா்களுக்கான ஓய்வூதிய குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கண்ணமங்கலம் அருகேயுள்ள கம்... மேலும் பார்க்க

கிராம கோயில் பூசாரிகள் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கிராம கோயில் பூசாரிகள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் வாசு தலைமை வகித்து சங்க ... மேலும் பார்க்க