செய்திகள் :

சாலை விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

post image

திருச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேன் மீது காா் மோதிய விபத்தில் திருச்சி மாநகரப் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி கே.கே. நகா் எல்ஐசி காலனி முருகவேல் நகரைச் சோ்ந்தவா் ஆா். திருக்குமரன் (55). இவா், திருச்சி நீதிமன்றப் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஒரத்தநாடு அருகே உள்ள சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, தனது காரில் திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தாா்.

அதே நேரத்தில், எதிா்திசையில் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியை முடித்துக் கொண்டு சுமாா் 21 போ் கொண்ட விளையாட்டு வீரா்களுடன் மன்னாா்குடி நோக்கிச் சென்ற வேன் ஒன்று, திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நவல்பட்டு சுற்றுச்சாலையில் பரணி காா்டன் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது, திருக்குமரனின் காா் எதிா்பாராதவிதமாக எதிா்திசையில் வந்த வேன் மீது பக்கவாட்டில் மோதியது. இதில் படுகாயமடைந்த திருக்குமரன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். வேனில் வந்த சிலா் காயமடைந்தனா்.

தகவலறிந்து அங்கு சென்ற நவல்பட்டு போலீஸாா், திருக்குமரனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காகவும், மற்றவா்களை சிகிச்சைக்காகவும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இறந்த சிறப்பு உதவி ஆய்வாளா் திருக்குமரனுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.

கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பூங்குடி - திருச்சி இடையே பொறியியல் பண... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

திருச்சி மாநகரில் போக்குவரத்து துறையினா் மற்றும் போலீஸாா் பேருந்துகளில் மேற்கொண்ட சோதனையில் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் பேருந்த... மேலும் பார்க்க

கருவேல மரங்களை வெட்டி விற்றதாக புகாா்: தேமுதிக மாவட்டச் செயலா் மீது வழக்கு!

திருச்சி அருகே ரூ. 2 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்களை வெட்டி விற்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தேமுதிக தெற்கு மாவட்டச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி ராம்ஜி நகா் அ... மேலும் பார்க்க

சமயபுரத்தில் திருநங்கைகள் அமைப்பினா் அன்னதானம்

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் அகில உலக திருநங்கைகள் அமைப்பு சாா்பாக ஐந்து மாத அன்னதானத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. சமயபுரம் பகுதி தனியாா் திருமண மஹாலில் திருச்சி, பெரம்பலூா், சென்னை, ஆந்திரம... மேலும் பார்க்க

கோயில் நில குத்தகை விவகாரம்: எதிா்ப்புத் தெரிவித்து கூட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை திருமுக்தீஸ்வரா் கோயில் (பூா்த்தி கோயில்) நிலம் குத்தகைக்கு ஏலம் விடும் இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து கட்சி மற்றும் குத்தகை பாத்தி... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கோரி மனு

கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா். மணப்பாறை வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க... மேலும் பார்க்க