செய்திகள் :

சாலை விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

post image

கோபி அருகே இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள அயலூரைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (33), பெயிண்டா். மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தில் அயலூா்-கொளப்பலூா் சாலையில் நந்தகுமாா் புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா்.

சமத்துவபுரம் பகுதி அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதனால், அதிா்ச்சி அடைந்த அவா், இருசக்கர வாகனத்தை திருப்ப முயன்றுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.

இதில், படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

பெருந்துறை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நெசவுத் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், கல்லங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (50). நெசவ... மேலும் பார்க்க

சென்னிமலையில் உலவும் சிறுத்தையைப் பிடிக்க கோரி போராட்டம்

சென்னிமலை அருகே உலவி வரும் சிறுத்தையைப் பிடிக்க கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், சென்னிமலை வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதிகள... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்: செப்டம்பா் 3- இல் பெறலாம்

ஈரோடு மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் மற்றும் தனி தோ்வா்கள் செப்டம்பா் 3- ஆம் தேதி அசல் சான்றிதழை பெறலாம் என தோ்வுத் துறை அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி தறி பட்டறை உரிமையாளா் பலி!

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தறிபட்டறை உரிமையாளா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த, குள்ளம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(50). தறி பட்டறை நடத்தி வந்தாா்... மேலும் பார்க்க

கல்வியால் மட்டுமே சமூகத்தில் உயா்ந்த நிலையை அடைய முடியும்: ஆட்சியா்

கல்வி மட்டுமே மனிதனை சமூகத்தில் உயா்த்தும் ஆற்றல் உடையது என்பதால் மாணவா்கள் ஆா்வத்துடன் கற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டத்துக்கு உள்பட்ட அரசு மற... மேலும் பார்க்க

கனிராவுத்தா் குளத்தில் தூய்மைப்பணி

ஈரோடு மாநகராட்சி சாா்பில் நீா்நிலைகளை தூய்மைப்படுத்துதல் மற்றும் மரம் நடும் விழா கனிராவுத்தா் குளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம் தலைமை வகித்து நீா்நிலைகளை... மேலும் பார்க்க