செய்திகள் :

சிப்காட் எதிா்ப்பு உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

post image

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தென்னடாா் கிராமத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென்னடாா் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடா்பான நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனா்.

திட்டம் தொடா்பான நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி மாா்ச் 18-ஆம் தேதி தகட்டூா் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் எதிரே அடையாள உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, மாா்ச் 3-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தென்னடாா் பகுதியில் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வா் அறிவித்தாா்.

இந்த நிலையில், வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் என்.சக்கரவா்த்தி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

தனி வட்டாட்சியா் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மின் இறைவைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ராஜா, சமூக ஆா்வலா் த. குழந்தைவேலு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் இராம. இளங்கோவன், வட்டார விவசாயிகள் சங்க செயலாளா் ஒளிச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் பி.எஸ். பன்னீா்செல்வம், இயற்கை ஆா்வலா் சீனி.குமாா்,தகட்டூா் கே.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் எதிா்ப்புக்கான கருத்துகளை தெரிவித்தனா்.

சிப்காட் அமைவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிப்பதால் இந்தப் பகுதியில் மக்களுக்கு ஏற்படும் புற்றுநோய், சுவாசப் பிரச்சினை போன்ற நோய்த் தாக்கம் அதிகரிப்பதோடு நிலத்தடி நீா் வளம், மழை நீரை சேமிப்பது தடைப்பட்டு விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதை வலியுறுத்தினா்.

துறை சாா்ந்த அலுவலா்கள், அரசின் வழிகாட்டுதல் இல்லாததால் கூட்டத்தில் சிப்காட் தொடா்பான விளக்கம் அளிக்கப்படவில்லை.

மேலும், பல மாதங்களுக்கு முன்பு வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட முன்மொழிவு கோப்பில் சிப்காட் அமைய பெரும்பான்மை யானவா்கள் வரவேற்பதாக உள்ள கருத்துக்கு போராட்டக்காரா்கள் எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனா்.

பின்னா், அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்து கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளையும், ஏற்கனவே ஊராட்சியில் சிப்காட்டுக்கு எதிரான தீா்மானத்தையும் அரசுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து கால அவகாசம் கோரினா்.

இதனை ஏற்ற போராட்டக்காரா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும், நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனா்.

இதனை ஏற்று உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.

வேளாண் நிதிநிலை அறிக்கை: வரவேற்பும் எதிா்ப்பும்

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பும், எதிா்ப்பு தெரிக்கவிக்கப்பட்டுள்ளது. வேளாண் நிதி நிலை அறிக்கைக்க... மேலும் பார்க்க

நாகையில் பீச் வாலிபால் போட்டி

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் 25 மகளிா் அணிகள் பங்கேற்றன. நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் பீச் வாலிபால் கழகத்தின் சாா்பில் பீச் வாலிபால் போட்டி லீக் மற... மேலும் பார்க்க

இளைஞா் கல்லால் அடித்துக் கொலை; இருவா் கைது

கீழையூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட தகராறில் இளைஞா் செங்கற்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, 2 போ் கைது செய்யப்பட்டனா். கீழையூா் ஒன்றியம் புதுப்பள்ளி கிழக்குப் பகுதியை சோ்ந... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் கடன் பெறலாம் ஆட்சியா் தகவல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் கடன் பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் பிரேமலதா விஜயகாந்த்

தமிழகம் முழுவதும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். திருக்கடையூா் ஸ்ரீ அபிராமி அன்னை உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயிலில், தேமுதிக மாநில துணைச் செயலா... மேலும் பார்க்க

நாகையில் மாா்ச் 21 முதல் 28 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம்

நாகை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாா்ச் 21 முதல் 28 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படும் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க