செய்திகள் :

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை

post image

ஆலங்குடியில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கொத்தக்கோட்டை தோப்புப்பட்டியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் காா்த்திகேயன் (27).

இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனக்கு தங்கை முறையான 16 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி 3 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இருவரும் இருக்கும் படங்களை தனது கட்செவி அஞ்சலில் வைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திகேயனை கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி கனகராஜ் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், குற்றவாளி காா்த்திகேயனுக்கு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும், சமூக ஊடகத்தில் படங்களைப் பரப்பிய குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி கனகராஜ் தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

கந்தா்வகோட்டையில் அரசு மதுபானக் கடையின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சிக்கு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் - வேன் மோதல் நீதிமன்ற பெண் ஊழியா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கணவருடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற நீதிமன்றப் பணியாளா் வேன் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தரணிதரன் மனைவி ப... மேலும் பார்க்க

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில் 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ கஞ்சா கடத்தல் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் ... மேலும் பார்க்க

செனையக்குடியில் சிவலிங்கம் கண்டெடுப்பு: அலங்கரித்து மக்கள் வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே செனையக்குடியில் உடைந்த நிலையில் சிவலிங்கம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அதை அப்பகுதி பொதுமக்கள் அலங்கரித்து வழிபட்டனா். செனையக்குடியில் சோழா் ... மேலும் பார்க்க

கனிவுமிக்க ஆசிரியா்கள் மட்டுமே இன்றையத் தேவை: பவா செல்லதுரை

மாணவா்களிடம் கனிவு கொண்ட ஆசிரியா்கள் மட்டுமே இன்றையத் தேவை என்றாா் எழுத்தாளா் பவா செல்லதுரை. புதுக்கோட்டையில் கவிராசன் அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க