செய்திகள் :

சீனா: "மன அழுத்தைப் போக்கவே இதைச் செய்தேன்" - பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ரத்தத்தைத் திருடிய நபர்

post image

சீனாவைச் சேர்ந்த லி என்பவர் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, ரத்தம் எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, யு என்ற அந்தப் பெண் தனது படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது லியின் வீட்டுக் கதவைத் தள்ளி உள்ளே நுழைந்து, மயக்க மருந்து ஊற்றிய துணியைப் பயன்படுத்தி அவரை மயக்கமடையச் செய்து அந்தப் பெண்ணின் கையிலிருந்து ரத்தம் எடுத்துள்ளார்.

rep images

யுவின் கணவர் எதிர்பாராதவிதமாக அந்தச் சமயத்தில் வீடு திரும்பியபோது, அவரைப் பார்த்த லி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மயக்கம் தெளிந்த பிறகு, தனது கையில் ஊசி குத்திய தடம் இருப்பதைக் கண்டறிந்த அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றிருக்கிறார்.

லி விட்டுச் சென்ற துணியில் மயக்க மருந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. விசாரணையின் போது, லி தனது செயல்கள் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மட்டுமே செய்யப்பட்டவை என்று கூறியிருக்கிறார்.

"பிறர் வீடுகளுக்குள் ரகசியமாக நுழைவது எனக்குப் பரபரப்பை அளிக்கிறது. இது என் அழுத்தத்தைப் போக்க உதவுகிறது" என்று அவர் கூறியிருக்கிறார். பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து, ரத்தம் எடுத்ததற்காக லி என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பூனைக்காக மினியேச்சர் நகரத்தை கட்டினாரா சீன யூடியூபர்? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு அதன் உரிமையாளர்கள் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கின்றனர். இன்னும் சொல்லபோனால் குழந்தைகளைப் போன்று அதனை பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் சீன யூடிபர் ஒருவர் ப... மேலும் பார்க்க

பேத்தியின் 23 வயது வகுப்பு தோழனை விரும்பும் 83 வயது மூதாட்டி - இரு குடும்பமும் ஆதரவு என நெகிழ்ச்சி!

23 வயதான இளைஞரை 83 வயதான மூதாட்டி ஒருவர் விரும்புவதாக தெரிவித்துள்ள சம்பவம், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக டேட்டிங் செய்து வரும் இவர்களின் காதல் கதை எங்கிருந்து தொடங்கியது என்ப... மேலும் பார்க்க

”எப்போதும் போல தான் இரை வைத்தேன்; ஆனால் இந்த முறை...”- நீல நிறத்தில் முட்டை இட்ட கோழி; பின்னணி என்ன?

கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவில் உள்ள நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான கோழி நீல நிறத்தில் முட்டையிடுவதாக கூறும் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருக... மேலும் பார்க்க

சீனா: "என் கணவருடன் 5 வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி" - தோழிக்கு பேனர் வைத்த மனைவி; பின்னணி என்ன?

”கணவருடன் ஐந்து வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி” என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தொங்கவிட்டு சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் கவனம் பெற்றுவருகிறார்.சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹாங்ஷானைச் சேர்ந்த ஒரு பெண் தன... மேலும் பார்க்க

கழிவறை பிரச்னையால் பாட்டில்களில் சிறுநீர் கழித்த பயணிகள்; பறக்கும் விமானத்தில் என்ன நடந்தது?

விர்ஜின் ஆஸ்திரேலியா என்ற விமானத்தில் பயணிகள் சிறுநீரைக் கழிக்க பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பாலியில் உள்ள டென்பசார் நகரிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு... மேலும் பார்க்க

`அனுமதியின்றி என்னைத் தொட்டார்' - நடிகை அஞ்சலி ராகவ்; மன்னிப்பு கேட்ட போஜ்புரி நடிகர்

போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் நடிகர் பவன் சிங். இவரும் அஞ்சலி ராகவ்வும் நடித்த பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் பவன் சிங் தனது அனுமதி இல... மேலும் பார்க்க