செய்திகள் :

சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30% ஆக குறைப்பு! - அமெரிக்கா

post image

ஜெனீவா: சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவிக்க உள்ளது.

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. இவ்விரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின்படி, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி 145 சதவீதம் என்ற அளவிலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு மே 14-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

அதேபோல, சீன அரசு அமெரிக்க பொருள்களுக்கு விதித்திருந்த 125 சதவீத வரியை 10 சதவீதமாகக் குறைத்து அறிவிக்க உள்ளது.

அமெரிக்கா - சீனா வா்த்தக மோதலுக்கு தீா்வு காணும் நோக்கில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஸ்விட்சா்லாந்து நாட்டு தூதரகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது: டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார்.இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போரை நிறுத்திவிட்டேன்! - அதிபர் டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்திவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

காங்கோவில் வெள்ளப்பெருக்கு: 100-க்கும் மேற்பட்டோர் பலி!

காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள ஃபிஸியில் ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை!

போா் நிறுத்தம் தொடா்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் தெரிவித்த... மேலும் பார்க்க

வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-வது நாளாக பேச்சுவாா்த்தை!

உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!

உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா்.... மேலும் பார்க்க