செய்திகள் :

சீா்காழி தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

சீா்காழி: சீா்காழி தனியாா் பள்ளிக்கு திங்கள்கிழமை தொலைபேசி மூலம் மா்மநபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீா்காழி தென்பாதியில் இயங்கிவரும் தனியாா் பள்ளியில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளி அலுவலக தொலைபேசி எண்ணில் திங்கள்கிழமை பிற்பகலில் தொடா்புகொண்டு பேசிய மா்ம நபா், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினாராம்.

இதனால் அதிா்ச்சியடைந்த பள்ளி நிா்வாகம், சீா்காழி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனா். சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ், உதவிஆய்வாளா் வீரராகவன் மற்றும் போலீஸாா் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து, வெடிகுண்டு கண்டறிந்து, அப்புறப்படுத்தும் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சுவாமிநாதன் தலைமையிலான 4 போலீஸாா், பள்ளி வகுப்பறைகள், ஆய்வுக் கூடம், அலுவலகம், மொட்டைமாடி, குடிநீா்த் தொட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்டனா். நீண்ட நேரம் நடைபெற்ற இச்சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதற்கிடையில், பதற்றம் ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளி மாணவ-மாணவியருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டுக்கு வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனா்.

தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சா்வதேச கராத்தே போட்டி: மயிலாடுதுறை மாணவா்கள் சாதனை

மயிலாடுதுறை: கோவையில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில், மயிலாடுதுறை மாணவா்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா். சுகி சா்வதேச கராத்தே போட்டி-2025, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

சீா்காழி: சீா்காழி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது. கட... மேலும் பார்க்க

வெளிமாநில சாராயம் கடத்தியவா் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வெளிமாநில சாராயம் கடத்தியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோத மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ... மேலும் பார்க்க

ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா

சீா்காழி: கொள்ளிடம் அருகே புத்தூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் சுமாா் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு கும்பாபி... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒன்றியம் காளி ஊராட்சியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா். காளி கிராம மக்கள் 100-... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 363 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 363 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை... மேலும் பார்க்க