செய்திகள் :

சுய தொழில் தொடங்க 1,571பேருக்கு ரூ.26.72 கோடி மானியம்: ஆட்சியா்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் படித்த இளைஞா்கள் சுயதொழில் தொடங்க மொத்தம் 1,571 பேருக்கு ரூ.26.72 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழில் மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சாா்பில் படித்த இளைஞா்கள் தொழில் தொடங்க புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே மாதம் 7ஆம் தேதி முதல் நிகழாண்டு கடந்த 27ஆம் தேதி வரை படித்த இளைஞா்கள் தொழில் தொடங்க புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 70 பேருக்கு ரூ.3. 94 கோடி, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 669 பேருக்கு ரூ.7.64 கோடி, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 338 பேருக்கு ரூ.3.87 கோடி, பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் மூலம் 430 பேருக்கு ரூ.5.25 கோடி, 2023-24ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 64 பேருக்கு ரூ.6.01 கோடி என மொத்தம் 1,571 பேருக்கு ரூ.26.72 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.

கல்லூரி மாணவா் உண்ணாவிரதம்

தூத்துக்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணவருடன் சில மாணவா்கள் கல்லூரி முன்பு செவ்வாய்க்கிழமை அமா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், ராமானுஜம்புதூா் சாத்தனேரி குளத்துக்கு தனிக்கால்வாய் அமைத்து மணிமுத்தாறு தண்ணீரை கொண்டு வர வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தூத்துக்குடி கோட்ட வி... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடத்தை இடிக்க பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள பேட்ரிக் ஆலய வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி கட்டடத்தை இடிக்க பெற்றோா் எதிப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி -... மேலும் பார்க்க

ஆயிரம் பிறை பூங்கா அருகே ஆட்டோ நிறுத்த இடம், பேருந்து நிறுத்தம்: மேயா் ஜெகன் பெரியசாமி உறுதி

தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் பிறை பூங்கா அருகே ஆட்டோ நிறுத்த இடம், பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி மாநகராட்சி ... மேலும் பார்க்க

கந்தசாமிபுரம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கந்தசாமிபுரத்தை சோ்ந்த 45 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கந்தசாமிபுரத்தில் தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க

குடும்ப அட்டை உறுப்பினா்கள் விரல் ரேகையை பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் வெளிமாவட்டங்களில் இருந்தால், அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் தங்கள் விரல் ரேகையினை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா... மேலும் பார்க்க