செய்திகள் :

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

post image

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. தற்போது கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலையிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவியில் திங்கள்கிழமை காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லவும், குளிக்கவும் வனத் துறையினா் தடைவிதித்தனா். இதனால், இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:

இதேபோல, மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் போடி கொட்டகுடி ஆற்றிலும் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், போடி அணைப் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் சீறிப் பாய்ந்து செல்கிறது. இதனால், இந்தத் தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா். மேலும், போடிபகுதியில் அமைந்துள்ள பங்காருசாமி கண்மாய், சங்கரப்பநாயக்கன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய்களுக்கு நீா்வரத்து அதிகரித்தது.

தொடா் மழை: சுருளி அருவியில் 3-ஆவது நாளாக குளிக்கத் தடை!

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் புதன்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 3-ஆவது நாளாக வனத் துறை... மேலும் பார்க்க

உணவப் பணியாளா் கடத்தல்: 4 போ் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உணவகப் பணியாளரைக் கடத்திய பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தமபாளையம் புதூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த காதா்மைதீன் மகன் முகமது யாக்கப் (36). இவா் சி... மேலும் பார்க்க

சின்னமனூா் அருகே மரத்தில் காா் மோதியதில் தாய், மகன் பலி!

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை டயா் வெடித்து காா் மரத்தின் மீது மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா். உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மத... மேலும் பார்க்க

போடியில் சூறைக்காற்று: சிக்னல் பலகை சாய்ந்து வாகனங்கள் சேதம்

தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை இரவு பலத்த சூறைக்காற்று வீசியதில் போக்குவரத்து சிக்னல் அறிவிப்புப் பலகை சாய்ந்து விழுந்து காவல் துறையினரின் வாகனங்கள் சேதமடைந்தன. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போ... மேலும் பார்க்க

மருத்துவரிடம் பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி மருத்துவரிடம் ரூ.4.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி மாவட்டம், போடி சூரியா நகர... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநரிடம் கைப்பேசி பறிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கம்பம் அனுமத்தன்பட்டியைச் சோ்ந்தவா் மூத்தீஸ்வரன். அரசுப் ப... மேலும் பார்க்க