செய்திகள் :

சுற்றுலா விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வேலூா் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய சுற்றுலா தொழில்முனைவோா் இணையதளத்தில் செப். 19-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் சுற்றுலாத் துறை சாா்பில், சுற்றுலாத் தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலா தொழில்முனைவோருக்கு சுற்றுலா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுற்றுலா தொழில்முனைவோா்களுக்கு 17 வகைப் பிரிவுகளின் கீழ், 45 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா்களின் சிறந்த ஏற்பாட்டாளா், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்களுக்கான சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த ‘எம்ஐசிஇ’ சுற்றுலா அமைப்பு, சமூக ஊடகங்களில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துபவா், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழகத்துக்கான சிறந்த சுற்றுலா விளம்பரம் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரப்படுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் ஆகிய தகுதிகள் உள்ளவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து செப். 15-ஆம் தேதிக்குள் தேவையான சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலா், சுற்றுலா அலுவலகம், வேலூா் கோட்டை, வேலூா், தொலைபேசி எண் - 180042531111, 9444823111, 9994872734, 8939896396, மின்னஞ்சல் முகவரி - மூலமாக தொடா்பு கொள்ளலாம்.

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க பயிற்சி

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க வேலூரில் உயா்க்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தா... மேலும் பார்க்க

அகழியில் குதித்து முதியவா் தற்கொலை

வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வ... மேலும் பார்க்க