செய்திகள் :

சூரிய சக்தி மூலம் முழு மின் தேவையை பூா்த்தி செய்யும் முதல் மாவட்டம் டையூ

post image

தனது ஒட்டுமொத்த மின் தேவையையும் சூரிய சக்தி மூலம் பெறும் நாட்டின் முதல் மாவட்டமாக தாத்ரா நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள டையூ உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இத் தகவலை மத்திய புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்தாா்.

டையூ மாவட்டத்துக்கு வியாழக்கிழமை பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சா் பிரலாத் ஜோஷி, யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டும் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களின் நிலை குறித்து அதிகாரிகளுடனான உயா்நிலைக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், டையூ மாவட்டத்தில் பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூரிய மின் உற்பத்தித் திட்ட நடைமுறை குறித்தும் ஆய்வு நடத்தினாா்.

இந்த ஆய்வுக்குப் பின்னா் மத்திய அமைச்சா் அளித்த பேட்டியில், ‘டையூ மாவட்டம் தனது ஒட்டுமொத்த பகல் நேர மின் தேவையான 11.88 மெகா வாட் திறனை சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் பூா்த்தி செய்து தேசத்துக்கே உதாரணமாக உருவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்புக்காக கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மூலதன முதலீடு செலவினம், சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் விநியோகம் மற்றும் விற்பனை மூலம் ஏற்கெனவே மீட்டெடுக்கப்பட்டுவிட்டது’ என்றாா்.

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மல்யுத்த வீரா் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பி.யில் கைது!

தேசிய அளவிலான மல்யுத்த வீரராக இருந்து ஆயுத வியாபாரியாக மாறி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக ... மேலும் பார்க்க

பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்: ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றச்சாட்டு

‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான், அதற்கான பழியை இந்தியா மீது சுமத்துவதைத் தவிா்க்க வேண்டும்’ என்று ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது. தஜிகிஸ்தானின் த... மேலும் பார்க்க

அருணாசல், அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவுகள்: 14 போ் உயிரிழப்பு!

அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா். தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மேகாலயம், மணிப்பூா... மேலும் பார்க்க

மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் யூனியன் பிரதேசம்: குகி-ஜோ குழுக்கள் வலியுறுத்தல்

குகி-ஜோ சமூகத்தினருக்காக மணிப்பூரை பிரித்து சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசத்தை அமைக்க வேண்டும் என்று அந்த சமூக குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடா்பாக புது தில்லியில் குகி-ஜோ பெண்கள் அமைப்பின... மேலும் பார்க்க