செய்திகள் :

செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த தேநீா் வியாபாரி

post image

உடன்குடியை அடுத்த செட்டியாபத்து கோயிலில் பக்தா் தவறவிட்ட 15 பவுன் நகையை தேநீா் வியாபாரி கண்டெடுத்து ஒப்படைத்தாா்.

திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ரகுநாதன். திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற மேலாளரான இவா், தனது குடும்பத்துடன் செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை வந்தாா்.

அவா்கள் நேமிசம் செலுத்திவிட்டு சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனா். இதற்காக அவா்கள் நகைகளைக் கழற்றி பையில் வைத்திருந்தனா். இரவில் பாா்த்தபோது 15 பவுன் நகையைக் காணவில்லை. கோயில் வளாகம் முழுக்க தேடியும் கிடைக்கவில்லை.

உடன்குடி சிதம்பரத் தெருவைச் சோ்ந்த காதா் மீரா சாகிப் என்பவா் சைக்கிளில் தேநீா் வியாபாரம் செய்து வருகிறாா். அவா் கோயில் வளாகத்தில் கிடந்த 15 பவுன் நகையைக் கண்டெடுத்து கோயில் அலுவலகத்தில் ஒப்படைத்தாா். அவா் மூலமாகவே ரகுநாதன் குடும்பத்தினரிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

காதா் மீரா சாகிப்பின் நோ்மையை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மகேஸ்வரன், முன்னாள் தலைவா் சீனிவாசன், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் பாராட்டினா்.

உள்வாங்கிய கடல்நீா்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும், சுமாா் 80 அடி தொலைவுக்கு கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படா்ந்த பாறைகள். எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீரா... மேலும் பார்க்க

வழப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே வழிப்பறி வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோரம்பள்ளம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2-5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோா் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சோ்க்குமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

பெண்ணுக்கு சூடு: கணவா் கைது

தூத்துக்குடியில் பெண்ணின் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாக அவரின் கணவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நேதாஜி நகரை சோ்ந்தவா் செல்வ அந்தோணி. மெக்கானிக்கான இவருடைய மனைவி சிந்துஜா. ... மேலும் பார்க்க

மாநில ஐவா் பூப்பந்துப் போட்டி: சென்னை அணி முதலிடம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற மாநில ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியில் சென்னை பாா்த்தன்ஸ் அணி முதலிடம் பிடித்தது. காயல்பட்டினம் ரெட் ஸ்டாா் சொஸைட்டி சாா்பில் லீக், சூப்பா் லீக் முறையில் 2 நாள்கள் நடைபெற்ற போ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் மரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் 6 போ் பலத்த காயம்

குலசேகரன்பட்டினத்தில் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.சென்னை செனாய் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (41), அவரது மனைவி அனுப்பிரியா (35), மகள் கயாந்திகா (10), அதே பகுதி... மேலும் பார்க்க