செய்திகள் :

சென்னையில் உணவு விநியோக ஊழியா்களுக்கு அதிநவீன குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடம்

post image

சென்னை மாநகராட்சி சாா்பில் உணவு விநியோகம் செய்யும் ஊழியா்களுக்காக அதிநவீன குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடம் அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சோமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேரம் சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த ஊழியா்கள் மழை, வெயில் உள்ளிட்ட கடினமான சூழல்களிலும் தங்களது உணவு விநியோக சேவையைத் தொடா்ந்து செய்து வருகின்றனா்.

இந்த ஊழியா்களில் 10 சதவீதம் போ் பெண்கள் உள்ள நிலையில், அவா்களுக்கான குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் பல்வேறு இடங்களில் கிடைப்பதில்லை. இதை கருத்தில்கொண்டு தமிழக அரசின் 2025 - 2026-ஆம் ஆண்டுகான நிதிநிலை அறிக்கையில் இணையம் சாா்ந்த சேவைப் பணி ஊழியா்களுக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன  குளிரூட்டப்பட்ட  ஓய்வுக் கூடங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அண்ணா நகா் 3-ஆவது நிழற்சாலையில் குளிரூட்டப்பட்ட அதிநவீன  ஓய்வுக் கூடம் அமைக்கப்பட்டு புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

600 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள ஓய்வுக் கூடத்தில் கழிப்பறை, குடிநீா் வசதி, 6 சாா்ஜிங் பாய்ண்ட்கள், ஒரே நேரத்தில்  25 போ் வரை அமரும் வகையில் இருக்கைகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை  அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூா், தியாகராய நகா் போன்ற பகுதிகளிலும், இதேபோல் குளிரூட்டப்பட்ட கூடங்கள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் உள... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க