செய்திகள் :

சென்னையில் நாளை முக்கிய அறிவிப்பு: ஓபிஎஸ்

post image

சென்னையில் நாளை(ஜூலை 31) முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தோ்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதிமுக - பாஜக கூட்டணி உருவான நிலையில், தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, அரசு முறை சுற்றுப்பயணமாக கடந்த ஜூலை 26, 27-ஆம் தேதிகளில் தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தார். அப்போதும், அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டண அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டார்.

இந்தக் கண்டன அறிக்கை, பாஜகவை முற்றிலுமாக எதிர்க்க அவர் முடிவு செய்துவிட்டதைக் காட்டுகிறது.

இதனிடையே, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று(ஜூலை 30) நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ், “சென்னையில் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும் அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் நாளை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

Former Chief Minister O. Panneerselvam has said that an important announcement will be made in Chennai tomorrow (July 31).

7 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.2, 3) தஞ்சாவூா், நாகை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:ம... மேலும் பார்க்க

பட்டியலின மக்கள் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசுக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை

சிறுதாவூரில் உள்ள பட்டியலின மக்களின் நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மாா்க்சிஸ்ட் மாநில செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர கால அவகாசம்

அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.இது குறித்து அவா் கூறிய... மேலும் பார்க்க

தங்கச் சங்கிலி பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை கிண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.ஈக்காட்டுதாங்கலைச் சோ்ந்தவா் ஹேமலதா (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவத்தில் வேலை செய்து ... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: மக்களுக்கு முதல்வா் அழைப்பு

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள மருத்துவப் பரிசோதனை முகாம்களில் பொது மக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெள... மேலும் பார்க்க

ரிதன்யா உடற்கூறாய்வு அறிக்கையில் முழு விவரம் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ரிதன்யாவின் உடற்கூறாய்வு அறிக்கையில் முழுமையான விவரங்கள் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.திருப்பூா் மாவட்டம் அவிநாசி அருகே... மேலும் பார்க்க