செய்திகள் :

சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒத்திகை

post image

சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதன்கிழமை (மே 7) மாலை 4 மணிக்கு பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலா் தீரஜ்குமாருடன் மத்திய அரசு அதிகாரிகள் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா். இதில், உள்துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலா்கள், பேரிடா் மீட்பு ஆணையா், காவல் துறை டிஜிபி, ஏடிஜிபி, கல்பாக்கம் அணுமின் நிலைய திட்ட இயக்குநா், சென்னை துறைமுகத் தலைவா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், ஊா்க்காவல் படை ஐஜி, தக்ஷிண பாரத் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட உள்ளது. மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படும்.

ஒத்திகை நிகழ்வை சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் கண்காணிக்கும். மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்த ஒத்திகையில், பாதுகாப்பு துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொள்வா்.

தற்போது நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகையால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இது போா் காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கான ஒத்திகை மட்டுமே. பிற பகுதிகளில் வழக்கமான நிலை நீடிக்கும் என்று அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதிதாக கட்சி தொடங்கியோா் முதல்வராக ஆசைப்படுவதா? முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவா்கள் முதல்வராக ஆசைப்படுவதா என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 3,000 போ் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவால... மேலும் பார்க்க

போா் வேண்டாம்: வைகோ

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ கூறினாா். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத்தியது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூரில் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கண்ணப்ப நாயனாா் சிலை நெதா்லாந்தில் இருப்பது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கண்டறியப்பட்டது. மேலும், அந்தச் சிலை ஏலத்த... மேலும் பார்க்க

குடிநீா் பாட்டில்களில் மறைந்திருக்கும் நுண் நெகிழி: உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

கோடை காலத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை நேரடி வெயிலில் வைத்தால் நுண் நெகிழிகள் தண்ணீரில் கலந்து உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத உடல்கள்: கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை

தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடா்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. வேலூா் மாவட்டம் சோளிங்கா் அரசு மருத்துவமனையி... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு; நேரில் ஆஜராக உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்... மேலும் பார்க்க