செய்திகள் :

சென்னை: வடிகால் தொட்டியில் விழுந்த பெண்; சடலமாக மீட்ட காவல்துறை - என்ன நடந்தது?

post image

சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி, வீரபத்திரன் கோயில் தெருவில் உள்ள ஒரு வண்டல் சேகரிப்பு தொட்டியில் (silt catch pit) பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று காலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரும், தீயணைப்பு படையினர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அதில், ``உயிரிழந்தவர் பெயர் தீபா (41). கணவனை இழந்த இவர், கோடம்பாக்கத்தில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், நேற்று அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இரவு நேரத்தில் அந்தப் பெண் மரப்பலகையால் மூடப்பட்டிருந்த தொட்டியின் மீது நடந்து சென்றுள்ளார்.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

அப்போது பலகை உடைந்ததால் அவர் பள்ளத்தில் விழுந்துள்ளார். பள்ளத்தில் விழுந்ததில் அவரது தலை மற்றும் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக யாரும் கவனிக்காததால், அவர் பள்ளத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இது ஒரு விபத்து என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என்றது.

இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் மக்கள், 'மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் மாநகராட்சியின் பொறுப்பற்ற தன்மையே இந்த விபத்துக்குக் காரணம். பல இடங்களில் வடிகால் தொட்டிகள் மூடப்படாமல் அல்லது பலவீனமான பலகைகளால் மூடப்பட்டிருக்கிறது. இது பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது." என்றனர்.

சென்னை மாநகர துணை மேயர் மகேஷ்குமார், ``மழைநீர் வடிகால் பள்ளத்தில் இருந்து அந்த பெண் மீட்கப்படவில்லை. அருகே உள்ள வண்டல் மண் சேரும் தொட்டியில் இருந்து தான் மீட்கப்பட்டு உள்ளார். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் பணிகளே நடக்கும். இதன் காரணமாக அந்த பகுதியில் அந்த பெண் அதில் விழுந்து உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை” இவ்வாறு அவர் கூறினார் .

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை" - காவல்துறைக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்!

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் போராடி 13-ம் தேதி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள் இன்று (செப்டம்பர் 4) காலையில் சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் கூடியிருந்தனர்.தகவலறி... மேலும் பார்க்க

GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? - விளக்கும் நிபுணர்!

'ஒரே நாடு, ஒரே வரி' - இது தான் ஜி.எஸ்.டியின் சாராம்சம்.முன்பு, மத்திய அரசு வரி, மாநில அரசு வரி, இந்த வரி, அந்த வரி என ஏகப்பட்ட வரிகளைக் கட்ட வேண்டியதாக இருந்தது. 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி, இந்தியா... மேலும் பார்க்க

GST 2.0: 'இனி கார், பைக் விலை 12-14% குறையலாம்; ஆனால்...' - நிபுணர் விளக்கும் சிக்கல்கள்!

தற்போது அறிமுகப்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி 2.0-ல் மிக முக்கியமாக கவனிக்கப்படுவதில் ஒன்றில், கார், பைக் விலைகள். ஜி.எஸ்.டி கவுன்சிலின் லேட்டஸ்ட் அறிவிப்பின் படி, 1200 சி.சி மற்றும் 4000 மிமி தாண்டாத பெட்ரோ... மேலும் பார்க்க

Stray Dogs Issue: `தெரு நாய்களை ஒழித்தால் நோய் வரும்...' - சீமான்

இந்தியாவில் தெரு நாய்கள் அதிகரித்து வருவது, தெரு நாய் கடி உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெரு நாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்களது வா... மேலும் பார்க்க

Dogs: `நாய்களின் உடலில் மைக்ரோ சிப்' - சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன? - முழு விவரம்!

தெரு நாய்கள்:தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக தெரு நாய்கள் தொல்லை, ரேபிஸ் நோய் தாக்குதல் போன்றவை கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த விவகாரம் விவாதக்களத்துக்குள் இருக்க... மேலும் பார்க்க

GST: "வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு...!" - மோடி, நிர்மலா சீதாராமனைப் பாராட்டும் இபிஎஸ்

2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5%, 12%, 18%, 28% என நான்கு வரி ஸ்லாப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இப்போது இந்த ஸ்லாப்கள் 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்களாக மட்டும்... மேலும் பார்க்க