செய்திகள் :

சென்னை: வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவர் பிட்புல் நாய் கடித்ததால் உயிரிழப்பு – என்ன நடந்தது?

post image

சென்னையில் உள்ள ஜாபர்கான் பேட்டை, VSM கார்டன் தெருவில் நடந்த துயரச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (48) என்பவர் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் வேலை முடித்து வீடு திரும்பிய அவர், தனது வீட்டின் முன்பாக அமர்ந்திருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பூங்கொடி என்பவர் தனது பிட்புல் நாயை அழைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

அந்த நேரத்தில் நாய் திடீரென கருணாகரனைத் தாக்கி, தொடைப் பகுதியில் கடுமையாகக் கடித்துள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிட்புல் நாய்

நாயைக் கட்டுப்படுத்த முயன்ற உரிமையாளர் பூங்கொடியையும் நாய் கடித்ததால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பொதுமக்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தகவலறிந்து வந்த குமரன் நகர் போலீசார், கருணாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம், சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் தொடர்பான பாதுகாப்பு விவகாரங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

தெரு நாய்கள்

தற்போது சென்னை முழுவதும் சுமார் 1.8 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாகவும், 2024ஆம் ஆண்டில் மட்டும் 14,000 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், டெல்லி உள்ளிட்ட தலைநகர் பகுதிகளில் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கவும், கருத்தடை ஊசி போடவும் உத்தரவிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கிய நிலையில், சென்னையில் மீண்டும் நடந்த நாய்க்கடி உயிரிழப்பு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான்: புலிகள் வாழும் காட்டில் சிக்கிய சுற்றுலா பயணிகள் – சவாரி வாகனம் பழுதடைந்ததால் பரபரப்பு!

ராஜஸ்தானின் ரந்தாம்போர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற வாகனம் பழுதடைந்ததால் புலிகள் வாழும் காட்டில் பயணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் ஒன்றரை மணி நேரம் சிக்கித் தவித்துள்ள சம்பவம் பெரும் பரப... மேலும் பார்க்க

ஸ்வீடனின் 113 ஆண்டுகள் பழைமையான தேவாலயம் புதிய இடத்திற்கு மாற்றம் - என்ன காரணம் தெரியுமா?

ஸ்வீடனின் ஆர்க்டிக் பகுதியிலுள்ள புகழ்பெற்ற கிறூனா தேவாலயம், தரை இடிவு (landslide) மற்றும் நிலத்தடி இரும்புத்தாது சுரங்க விரிவாக்கத்தால் புதிய இடத்திற்கு மாற்றப்படுகிறது.600 டன் எடையுள்ள, 113 ஆண்டுகள்... மேலும் பார்க்க

`ஒரு கோழியின் கதை' ஆயுளைக் கடந்து; 14 ஆண்டுகள் கடந்து வாழும் ’உலகின் வயதான கோழி’ - ஆச்சர்ய பின்னணி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வாழும் ‘Pearl’ என்ற கோழி, சாதாரணமாக 3 முதல் 10 ஆண்டுகள் வரை மட்டுமே வாழும் கோழிகளின் சராசரி ஆயுளை மீறி, 14 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.Pearl... மேலும் பார்க்க

யூடியூபரின் இறப்புக்கு நீதிகேட்டு போராடும் மேற்கு ஆப்பிரிக்க நாடு - யார் இவர், என்ன காரணம்?

மேற்கு ஆப்பிரிக்கா நாடான புர்கினா ஃபாசோவை சேர்ந்த, அலினோ ஃபாசோ. ஜனவரி 2025-ல் மற்றொரு மேற்கு ஆப்பிரிக்கா நாடான ஐவரி நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்டு அபிஜான் நகரில் உள்ள ராண... மேலும் பார்க்க

புனே: "உணவை வீணாக்கினால் ரூ.20 அபராதம்" - உணவகத்தின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

புனேயில் தென்னிந்திய உணவகம் ஒன்று தங்களது வாடிக்கையாளர்களுக்கு நூதனமான ஒரு அறிவிப்புப் பலகையை வைத்திருக்கிறது. அறிவிப்புப் பலகைஅதில் உணவுகளின் விலைப்பட்டியலைக் குறிப்பிட்டு கடைசியில், சாப்பாட்டை வீணாக... மேலும் பார்க்க

Dog Bite: நாய் போல் கத்துவார்களா; அசைவம் சாப்பிடக்கூடாதா; தொப்புளைச் சுற்றி ஊசிப் போடுவார்களா?

நாய்க்கடி குறித்த செய்திகள் வராத நாளே இல்லை என்கிற நிலையில் இருக்கிறோம். இன்றும் பலர் நாய் கடித்தால், தொப்புளைச் சுற்றி 16 ஊசிகள் போடுவார்கள் என நினைத்துக்கொண்டு நாய் கடித்தாலும் மருத்துவமனை போகாமல் இ... மேலும் பார்க்க