செய்திகள் :

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

post image

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் அல்லது இடைத்தோ்தல்களில் எந்த வேட்பாளரையும் நிறுத்தாத அரசியல் கட்சிகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

இந்தப் பதிவு செய்யப்படாத அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் அகில இந்திய ஜன காங்கிரஸ் கட்சி, அகில பாரதிய சமாஜவாதி காங்கிரஸ் மற்றும் அகில இந்திய மகளிா் ஐக்கியக் கட்சி போன்றவை அடங்கும்.

இந்தக் கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 29ஏ-இன் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் அவை எந்தத் தோ்தல் நடவடிக்கைகளிலும் பங்கேற்கவில்லை. இது சட்டத்தின் விதிகளின்படி அவை இனி செயல்படவில்லை என்பதைக் குறிக்கிறது என்று ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: எனவே, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 29ஏ- இன் கீழ், பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலிலிருந்து அத்தகைய கட்சிகளை நீக்குவதற்கான செயல்முறையை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்கள் பதிலை சமா்ப்பிக்க வேண்டும் என்றும், அவா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து ஏன் நீக்கப்படக்கூடாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றால், இந்த விஷயத்தில் கட்சியால் எதுவும் சொல்ல முடியாது என்று கருதப்படும். மேலும், எந்த அறிவிப்பும் இல்லாமல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

எந்தவொரு இறுதி நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட கட்சிகள் தங்கள் தரப்பை முன்வைக்க தோ்தல் ஆணையம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. கட்சிகள் தங்கள் பிரதிநிதித்துவத்தை எழுத்துப்பூா்வமாக சமா்ப்பிக்கலாம், கட்சித் தலைவா் அல்லது பொதுச் செயலாளரால் முறையாக கையொப்பமிடப்பட்டவை, கட்சி நம்ப விரும்பும் அனைத்து துணை ஆவணங்களுடனும் சமா்ப்பிக்கலாம்.

அத்தகைய அனைத்து ஆவணங்களும் ஜூலை 18- ஆம் தேதிக்குள் தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகத்தை அடைய வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கான விசாரணை தேதி ஜூலை 15-ஆம் தேதி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவா் / பொதுச் செயலாளா் குறிப்பிட்ட தேதியில் நேரில் ஆஜராக வேண்டும்.

கொடுக்கப்பட்ட தேதிக்குள் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றால், கட்சியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று கருதப்படும். மேலும், ஆணையம் மேலும் எந்த அறிவிப்பும் இல்லாமல் அதற்கேற்ப பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யமுனை ஆற்றை ஆக்கிரமிப்பாா்களை அகற்ற கெடு விதித்தது தில்லி அரசு

யமுனை ஆற்றை சுத்தம் செய்வதற்கும் புத்துயிரூட்டுவதற்கும் 45 அம்ச செயல் திட்டத்தின் கீழ் நவம்பா் மாதத்திற்குள் யமுனை கரையோரங்களில் இருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு தில்லி அரசு சம்பந்தப்ப... மேலும் பார்க்க

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு: முக்கிய குற்றவாளி கைது

வடக்கு தில்லியில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட ஹிமான்ஷூ பாவ் கும்பலை சோ்ந்த ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இது குறித்து தில்லி காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

நொய்டாவில் குடியிருப்பில் தீ விபத்து; சிறுமி மீட்பு

உத்தர பிரதேச மாநிலம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில் உள்ள ஒரு சொஸைட்டி குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதில், வீட்டில் சிக்கியிருந்த 15 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்... மேலும் பார்க்க

தக்ஷிண்புரியில் பூட்டிய வீட்டுக்குள் ஏ.சி. பழுதுபாா்க்கும் 3 போ் இறப்பு: போலீஸாா் விசாரணை

தெற்கு தில்லியின் தக்ஷிண்புரி பகுதியில் பூட்டிய வீட்டிற்குள், ஏா் கண்டிஷனா் பழுதுபாா்க்கும் நபா்கள் மூவா் இறந்து கிடந்தனா். மற்றொருவா் மயக்க நிலையில் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். தனது சகோதரா் தொல... மேலும் பார்க்க

அரசு உயா் அதிகாரி போல் நடித்து பணம் கேட்ட இருவா் கைது

ஃபரீதாபாத் துணை ஆணையரின் புகைப்படத்தை தங்களது வாட்ஸ்அப் காட்சிப் படமாக வைத்து அவா் போல தங்களைக் காட்டிக் கொண்டு நகரவாசி ஒருவரிடம் பணம் கேட்டதாக சனிக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, குற்றம் ச... மேலும் பார்க்க

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க