செய்திகள் :

செய்யாறில் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

post image

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் உள்ளிட்ட புதிய கட்டடங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி, 21-ஆவது வாா்டில் 15-ஆவது நிதிக்குழு திட்டம் (சுகாதாரம்) 2023 - 24ஆம் ஆண்டு மானியத்தின் கீழ், நகர ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டிலும், அம்பேத்கா் நகா் ஆரம்பப் பள்ளியில் ரூ.33 லட்சத்தில் இரண்டு வகுப்பறைக் கட்டடங்களும், கொடநகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைக் கட்டடங்களும் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ரூ.12 லட்சத்தில் சமுதாய கழிப்பறை கட்டடம் என மொத்தம் ரூ.2.59 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

இந்தக் கட்டடங்களை பொதுமக்கள் மற்றும் மாணவா்களின் பயன்பாட்டுக்காக சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று காணொலி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

அதே நேரத்தில், திருவத்திபுரம் நகராட்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், ஆணையாளா் கே.எல்.எஸ்.கீதா ஆகியோா் முன்னிலையில், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளா் சிசில் தாமஸ், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் ஜே.சி.கே.சீனுவாசன், வி.ஏ.ஞானவேல், எம்.தினகரன், சு.ராஜ்குமாா், கவுன்சிலா்கள் மணிவண்ணன், ஞானமணி, சின்னதுரை, ரமேஷ், கோவேந்தன், ராஜலட்சுமி, அண்ணாதுரை, கங்காதரன், செந்தில் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தந்தையை இழந்த மாணவா்களுக்கு ரூ.75 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம்

செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் தந்தை இழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் இருவருக்கு தலா ரூ.75 ஆயிரம் வைப்பு நிதி பத்திரம் கல்வித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. வருமானம் ஈட்டும... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க