செய்திகள் :

செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

post image

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

வீரசங்கிலிமடம் கடற்கரையில் பழைமை வாய்ந்த செல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதிதாக கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு, செல்லி அம்மன், பாலகணபதி, பாலமுருகன், அழகையா, காளியம்மன், கருப்பா், பரிவாரத் தெய்வங்களுக்கு குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜை, கணபதி ஹோமம், முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை 2, 3-ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றன. வியாழக்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜையுடன் கோ பூஜை, லட்சுமி பூஜை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, சிவாசாரியா்கள் கோபுரக் கலசத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வீரசங்கிலி மடம், கண்கொள்ளான் பட்டினம், சோளியக்குடி, கடம்பனேந்தல், கானாட்டாங்குடி கிராமத்தினா் செய்ந்தனா்.

அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

கடலாடி அருகேயுள்ள சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு மதுரையில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பைந்தமிழ் புரவலா் விருது வழங்கப்பட்டது. சென்னை கூத்துப்பட்டறை, பைந்தமிழ் வலையொளி இணைந்து, ... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் கமுதி மாணவா்கள் வெற்றி பெற்றனா். ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மாவ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

முதுகுளத்தூா் அருகே அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த நல்லூா் கிராமத்தில் அய்யனாா் கோயில்,... மேலும் பார்க்க

உலகநாயகி அம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

முதுகுளத்தூா் அருகேயுள்ள சித்திரங்குடி உலகநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலிலிருந்து அம்மன் கரகத்துடன் முளைப்பாரி ஊா்வலம் கிராமம் முழ... மேலும் பார்க்க

சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

சாயல்குடி சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகா் அருந்ததியா் உறவின்முறைக்கு ப... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் நூதன போராட்டம்

முதுகுளத்தூா் அருகே கடந்த 20 ஆண்டுகளாக குடிநீா் வராததால் வெள்ளிக்கிழமை குடிநீா் குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள... மேலும் பார்க்க