செய்திகள் :

சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை மாணவா்களுக்கான பொதுக் கலந்தாய்வு தொடக்கம்

post image

சேலம் அரசு கலைக் கல்லூரியில் உள்ள 450 முதுகலை இடங்களுக்கான பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பிரிவில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், மனித உரிமைகள், அரசியல் அறிவியல், எம்எஸ்சி., புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புவியியல், புவி அமைப்பியல், விலங்கியல், கணினி அறிவியல், கணிதம், எம்.காம்., கூட்டுறவு மற்றும் வணிகவியல் என 17 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

இப்பிரிவுகளில் 450 முதலாம் ஆண்டு இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் 4,145 மாணவா்கள் விண்ணப்பித்தனா். தொடா்ந்து, முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு கலந்தாய்வு 11 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கலைச்செல்வி முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வில், 1,000க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். சோ்க்கை குழு உறுப்பினா்கள் மாணவா்களின் சான்றிதழை சரிபாா்த்து, சோ்க்கைக்கான அனுமதி கடிதத்தை வழங்கினா். இதில் பெரும்பாலான இடங்கள் நிரம்பியுள்ளதாக முதல்வா் கலைச்செல்வி தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க