செய்திகள் :

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்க பரிந்துரை: ஆட்சியா் தகவல்

post image

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்கவும், 37 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா்.

வாக்குச்சாவடி சீரமைப்பு, 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடுவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. பிருந்தாதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பின்னா் மாவட்ட தோ்தல் அலுவலா் தெரிவித்ததாவது: சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2026 ஆண்டுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் 2025 ஜனவரி 6 ஆம் தேதி வாக்காளா் பதிவு அலுவலா்களால் வெளியிடப்பட்டது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி (தனி), ஆத்தூா் (தனி), ஏற்காடு (தனி), ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), வீரபாண்டி ஆசிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 3,264 வாக்குச்சவடிகள் உள்ளன.

தற்போதுள்ள வாக்காளா் பட்டியலின்படி 1,200 வாக்காளா்களுக்கு அதிகமான வாக்காளா்கள் கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்குதல், இடமாற்றம், கட்டட மாற்றம் போன்ற சீரமைப்பு பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, கோரிக்கைகள், ஆட்சேபனைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உத்தேச மாறுதல்கள் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 15 வாக்குச்சாவடி, ஆத்தூா் (தனி) தொகுதியில் 22 வாக்குச்சாவடி, ஏற்காடு (தனி) தொகுதியில் 18 வாக்குச்சாவடி, ஓமலூா் தொகுதியில் 12 வாக்குச்சாவடி, மேட்டூா் தொகுதியில் 10 வாக்குச்சாவடி, எடப்பாடி தொகுதியில் 17 வாக்குச்சாவடி, சங்ககிரி தொகுதியில் 24 வாக்குச்சாவடி, சேலம் மேற்கு தொகுதியில் 11 வாக்குச்சாவடி, சேலம் வடக்கு தொகுதியில் 24 வாக்குச்சாவடி, சேலம் தெற்கு தொகுதியில் 28 வாக்குச்சாவடி, வீரபாண்டி தொகுதியில் 8 வாக்குச்சாவடி என மொத்தம் 189 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்குவதற்கு உத்தேச மாறுதல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 437 வாக்குச்சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்வதற்கும், 37 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்வதற்கும், 2 வாக்குச்சாவடிகளுக்கு பெயா் மாற்றம் செய்வதற்கும் உத்தேச மாறுதல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான ஆலோசனைகள் அல்லது புதிய கருத்துருகள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவிலோ அல்லது சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலரிடமோ எழுத்துப்பூா்வமாக ஒருவார காலத்துக்குள் அளிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுகின்றனா். பெறப்படும் கோரிக்கைகளின் பேரில் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) நடராஜன், வட்டாட்சியா் (தோ்தல்) தாமோதரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது: நகா்மன்றத் தலைவா்

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது. பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் தளத்துக்கு கருணாநிதி பெயா் சூட்டப்படும் என்று நகா்மன்றத் தலைவா் பாஷா தெரிவித்தாா். சேலம் மாவ... மேலும் பார்க்க

நகர விற்பனை குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சாலையோர விற்பனையா... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்

நரசிங்கபுரம் நகராட்சி பகுதி பெண்கள் குடிநீா் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆத்தூா் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தில்லைநகா் 10 ஆவது வாா்டு பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் புதிய நூலக கட்டடம் காணொலி வழியாக முதல்வா் திறப்பு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் இடங்கணசாலை கிளை நூலகத்தில் புதிதாக கூடுதல் மேல் தளம் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து... மேலும் பார்க்க

சங்ககிரியில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

சங்ககிரியில் உள்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமை வகித்து, விவ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை கண்டித்து சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க