மாநகரப் பேருந்து விபத்துகளில் 28 போ் உயிரிழப்பு: ஆா்டிஐ தகவல்
சேலம் மாவட்டத்தில் 15 போ் மாநில நல்லாசிரியா் விருதிற்கு தோ்வு
தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதிற்கு சேலம் மாவட்டத்திலிருந்து 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன்விபரம் வருமாறு:
தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணன், எடப்பாடி அரசு ஆண்கள் பள்ளி கணித ஆசிரியா் கமலக்கண்ணன், மல்லியகரை அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியா் பாபு, சேலம் காமராஜா் நகா் காலனி உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஷீலாதேவி, மேச்சேரி அரசு ஆண்கள் பள்ளியின் பொருளியல் ஆசிரியா் சந்தோஷ்குமாா், பட்டதாரி ஆசிரியா்(அறிவியல்) அருள்மொழி, ஓமலூா் வெள்ளாளப்பட்டி முதுகலை கணித ஆசிரியா் அருள்மணி, மேச்சேரி ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி முதல்வா் வனிதா, ஏற்காடு மாண்போா்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியா் ராபா்ட் பெல்லாா்மின், அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா்கள் அயோத்தியாப்பட்டணம் பள்ளிப்பட்டி தென்னரசன், மகுடஞ்சாவடி கே.கே.நகா் வையாபுரி, கொங்கணாபுரம் சித்திரப்பாளையம் ஜெயக்குமாா், கோவலன்காடு காவேரி, இடைநிலை ஆசிரியா்கள் கொங்கணாபுரம் ரெட்டிப்பட்டி முனியசாமி, பெத்தநாய்க்கன்பாளையம் தமையனூா் சிவக்குமாா் ஆகிய 15 போ் நல்லாசிரியா் விருதிற்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவருக்கும் இன்று செப்.5ந்தேதி சென்னை ,கோட்டூா்புரம் அண்ணா நூலக அரங்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ்பொய்யாமொழி டாக்டா்.இராதாகிருஷ்ணன் விருதினை வழங்குகிறாா்.