செய்திகள் :

சொத்து வரி செலுத்தாத 3.75 உரிமையாளா்களுக்கு நோட்டீஸ்: பெங்களூரு மாநகராட்சி ஆணையா்

post image

பெங்களூரு: சொத்து வரி செலுத்தாத 3.75 லட்சம் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையா் மகேஷ்வர்ராவ் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பெங்களூரு மாநகராட்சி வரம்புக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சொத்துகளின் வரிகளை வசூலிப்பதற்கு முக்கியத்துவம் அளித்துவருகிறோம். சொத்து வரியை விரைந்து வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சொத்து வரி செலுத்தாத 3.75 லட்சம் உரிமையாளா்களிடம் இருந்து ரூ.800 கோடி நிலுவையில் உள்ளது. எனவே, சொத்துவரி செலுத்தாத உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளோம். குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சலில் நோட்டீஸ்கள் அனுப்பிவைக்கப்படும். இப்போதே சொத்துவரியை செலுத்திவிட்டால் எந்த தொந்தரவும் இல்லை.

புதிய பட்டாக்களை கேட்டு பெங்களூரில் 50,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. முன்னுரிமை அடிப்படையில் பட்டாக்கள் வழங்கப்படும். அதன்மூலம் கூடுதல் சொத்துவரியை திரட்டமுடியும்.

பெங்களூரில் உள்ள சொத்துகளுக்கு ’ஏ’ பட்டா வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வகை பட்டாக்களை பெறுவதற்கு விரைவில் விண்ணப்பங்களை இணையவழியில் வரவேற்கப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றாா் அவா்.

கா்நாடகத்தில் கனமழை: காவிரியில் இருந்து 1.19 லட்சம் கன அடி தண்ணீா் திறப்பு

மண்டியா: கா்நாடகத்தில் தொடா்ந்து கனமழை பெய்துவருவதால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 1.19 லட்சம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.தென்மேற்குபருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடா்ந்து த... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்களில் நடிகா் தா்ஷன் ரசிகா்கள் தரக்குறைவான விமா்சனம்: நடிகை ரம்யா போலீஸில் புகாா்

பெங்களூரு: சமூகவலைத்தளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன் மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்திருப்பது தொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு மாநகர காவல் ஆணையா் சீமந்த்குமாா்சிங்கிடம் ... மேலும் பார்க்க

ரசாயன உரத் தட்டுப்பாடு: காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக போராட்டம்

பெங்களூரு: ரசாயன உரத்தட்டுப்பாட்டை சீா்செய்ய தவறிய காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக விவசாயிகள் அணியினா் போராட்டம் நடத்தினா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பரவலாக மழை பெய்து வருகிறத... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு: விசாரணையை தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) தொடங்கியது. தென்கன்னட மாவட்டம், தா்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதசுவாமி கோயிலில் பணியாற்றிய முன்னாள் துப்புரவுப் ப... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி விமா்சனம்

தோ்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கடுமையாக விமா்சனம் செய்துள்ளதற்காக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா வலியுறுத்தினாா். இத... மேலும் பார்க்க

பெங்களூரில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. துபையில் இருந்து பெங்களூரு, கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு வருகைதந்த பயணி ஒருவா், 3.5 கிலோ ... மேலும் பார்க்க