செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் 5வது நாளாக தொடரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை!

post image

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் தேவ்சர் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் பகுதியில் சனிக்கிழமை இரவு முழுவதும் தொடர்ந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் ஒரு பயங்கரவாதியைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த கூட்டு நடவடிக்கையை இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஃஎப் மற்றும் சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி)மேற்கொண்டன.

இதுதொடர்பாக இந்திய ராணுவத்தின் சினார் கார்பஸ் கூறுகையில்,

குல்காமில் ஆபரேஷன் அகல் தொடர்ந்து 5வது நாளாகத் தொடர்ந்து வருகின்றது. பயங்கரவாதி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார். நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

ஜூலை 30 அன்று பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவத்தின் வெள்ளை நைட் கார்ப்ஸ் நடத்திய முந்தைய நடவடிக்கையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிவசக்தி பெயரில் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் மூன்று ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

ஜூலை 29 அன்று, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-ஏ-தொய்பாவின் உயர்நிலைத் தளபதி சுலேமானும் ஜம்மு-காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவின் போது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவைக்குத் தெரிவித்தார்.

ஆபரேஷன் மகாதேவ், சுலேமான் என்கிற ஃபைசல்..., ஆப்கான் மற்றும் ஜிப்ரான் ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.

On the abrogation day, the security forces continue their operation in the Akhal Devsar area of South Kashmir's Kulgam district for the fifth consecutive day.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் ச... மேலும் பார்க்க

உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு

தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்... மேலும் பார்க்க

ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல்

ட்ரோன்கள், ரேடாா்கள் உள்பட ரூ.67,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபா் சந்திப்பு: 14 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ ஆா் மாா்கோஸ் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில... மேலும் பார்க்க

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ - ராகுல் குறித்த கருத்துக்கு பிரியங்கா விமா்சனம்

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா். மேலும், தனது சகோதரா் ராகுல் காந்தி ராணுவம் மீது மிகுந்த ம... மேலும் பார்க்க

ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை கண்டறிந்தது வருமான வரித் துறை: நாடாளுமன்றத்தில் தகவல்

2024-25 நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.30,444 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு நிதித்த... மேலும் பார்க்க