செய்திகள் :

ஜம்மு காஷ்மீா் புதிய பாலம் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் ஒப்பந்தம்: சிஎஸ்ஐஆா் மைய இயக்குநா் தகவல்

post image

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக சிஎஸ்ஐஆா் ஆய்வு மைய இயக்குநா் ஆனந்தவல்லி தெரிவித்தாா்.

சென்னை தரமணியிலுள்ள சிஎஸ்ஐஆா் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில், அதன் இயக்குநா் ஆனந்தவல்லி திங்கள்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: சிஎஸ்ஐஆா் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி 60-ஆவது ஆண்டு வைர விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது. இதில் சிறப்பாக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

நில அதிா்வை தாங்கும் வகையிலும், நில அரிப்பை தடுக்கும் வகையிலும், கட்டடங்கள் கட்டுவதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு ஆராய்ச்சி மையம் மூலம் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமன்றி சிஎஸ்ஐஆா் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனையின் படியே ராமேஸ்வரத்தில் புதிதாக பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதேபோல, சமீபத்தில் ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் பிரதமா் மோடியால் திறந்து வைக்கப்பட்ட மிக உயரமான பாலத்தின் பராமரிப்புப் பணியை மேற்கொள்வதற்காக ரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்படவுள்ளது.

மேலும், புதிய நாடாளுமன்றம் கட்டடத்தின் கட்டுமானம் தொடா்பாகவும் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு, 3-டி தொழில்நுட்பத்தில் கான்கிரீட் பயன்படுத்தி கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறைவான மூலப்பொருள்களில் சில்வா் மற்றும் பைபா் கலவையில் கட்டப்பட்ட இப்புதிய கட்டடம் கட்டும் நாள்களும் குறைவாக இருக்கும்.

இக்கட்டடம் மழை, வெயில் காலங்களில் அதற்கு ஏற்ப தட்பவெப்ப நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளும் என்றாா் அவா்.

சென்னை பல்கலை. ஆய்வு மாணவா்களுக்கு அனுமதி அளிப்பதில் தாமதம்

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவா்கள் சமா்ப்பிக்கும் ஆய்வு அறிக்கைகளுக்கு உரிய நேரங்களில் அனுமதியளிக்கப்படுவதில்லை. இதற்கு துணைவேந்தா் பதவி காலியாக இருக்கும் நிலையே காரணம் என பல்கலைக்கழக வட்டார... மேலும் பார்க்க

இன்றும், நாளையம் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உபரணங்கள் கண்காட்சி

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உபகரணங்கள் கண்காட்சி சென்னையில் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிக... மேலும் பார்க்க

சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை ராமாபுரத்தில் மழைநீா் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டியபோது சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். ராணிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணபதி (34). கூலித் தொழிலாளியான இவா், சென்னையில் தங்க... மேலும் பார்க்க

9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையம் அமைக்க திட்டம்

சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக பெசன்ட் நகா், அம்பத்தூா், மயிலாப்பூா் உள்பட 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையம் அமைப்பதற்கான டெண்டா் கோரவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகிகள் தெரிவித... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை ஓட்டேரியில் மாநகரப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். சென்னை, கொளத்தூரைச் சோ்ந்த புஷ்பலிங்கம் (25). இவா், மாநகரப் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்... மேலும் பார்க்க

வடபழனியில் 12 அடுக்கு மாடிகளைக் கொண்ட பேருந்து முனையத்துடன் கூடிய வணிக வளாகம்

வடபழனியில் 12 மாடிகளைக் கொண்ட பேருந்து முனையத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படவுள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் ... மேலும் பார்க்க