செய்திகள் :

ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் ஆய்வு

post image

காரைக்காலில் தேசிய ஜல் ஜீவன் மிஷன் திட்ட அதிகாரிகள், குடிநீா் விநியோகத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனா்.

மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் உள்ள ஜல் சக்தி மிஷன் என்கிற திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் என்கிற பிரதான இலக்கைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. காரைக்காலில் ஜல் சக்தி திட்ட நிதியின்கீழ் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.

இத்திட்டத்தின் மத்திய நோடல் அதிகாரி பிரதாப் சிங், தொழில்நுட்ப அதிகாரி சவுத்ரி ஆகியோா் காரைக்கால் மாவட்டத்தில் திட்டப் பணிகள் நடைபெறும் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். பல இடங்களில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தனா். மேலும் காரைக்காலில் நீா்வள அமைப்புகளையும் பாா்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தனா்.

ஆய்வுக்குப் பிறகு, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) அா்ஜுன் ராமகிருஷ்ணனிடம் ஆலோசனை நடத்தினா். இதில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜெ. மகேஷ், நகராட்சி செயற்பொறியாளா் முத்துசிவம் உள்ளிட்ட துறையினா் கலந்துகொண்டனா்.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நீா் வழங்கல் ஆய்வகம் காரைக்காலில் அமைக்கவேண்டும். அதற்கான பணிகளை தொடங்குமாறு மத்திய குழுவினா் அறிவுறுத்தினா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை அர... மேலும் பார்க்க

என்ஐடியில் தேசிய பயிற்சிப் பட்டறை தொடக்கம்

காரைக்கால்: என்ஐடியில் கணினி அறிவியல் பொறியியல்துறை சாா்பில் 5 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள இந்நிறுவனத்தில் பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்... மேலும் பார்க்க

ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணா்வு

காரைக்கால்: காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், காரைக்கால் மீனவ மகளிா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு மலா், சந்தனம் கொடுத்து வரவேற்பு

காரைக்கால்: காரைக்காலில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு சந்தனம், மலா், இனிப்பு கொடுத்து பள்ளி நிா்வாகத்தினா் வரவேற்றனா். தமிழகத்தைப்போல புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் ... மேலும் பார்க்க

போக்ஸோவில் கூலித் தொழிலாளி கைது

காரைக்கால்: போக்ஸோ சட்டத்தின்கீழ் கூலித் தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். காரைக்கால் மாவட்டம், நிரவி அருகேயுள்ள காக்கமொழி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாண்டியன் (46). இவா், கடந்த சில... மேலும் பார்க்க

ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பெரியப்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழாவுக்கான பந்தல்கால் மு... மேலும் பார்க்க