செய்திகள் :

ஜஹாங்கீா்புரி கொலைச் சம்பவத்தில் ஒராண்டுக்கும் மேல் தேடப்பட்டு வந்தவா் கைது

post image

தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக மற்றொரு நபரைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் ஒரு ஆண்டிற்கும் மேலாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஹரியாணாவின் ஹிசாரில் வசிக்கும் ராஜன், ஜூலை 2-ஆம் தேதி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். திங்களன்று ரோஹிணியில் உள்ள மதுபன் சௌக்கில் இருந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த கொலைச் சம்பவம் ஜூலை 16, 2024 அன்று நடந்தது. ராஜன், அவரது மைத்துனா்கள் அமன் (எ) படா நாடா மற்றும் அபிஷேக் (எ) சோட்டா நாடா மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஆகியோா் பாரத் யாதவை கத்திகள் மற்றும் லத்திகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்த அவரது தாயாா் அவரைக் காப்பாற்றுமாறு பலமுறை மன்றாடிய போதிலும், தாக்குதல் நடத்தியவா்கள் பாரத் யாதவ் இறக்கும் வரை பலமுறை குத்தினா். குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் போலீஸாா் கைது செய்த நிலையில், ராஜன் சிறிய வேலைகள் செய்தல், அடிக்கடி இருப்பிடங்களை மாற்றுதல் மற்றும் மின்னணு தகவல்தொடா்புகளைத் தவிா்ப்பதன் மூலம் பிடியிலிருந்து தப்பிக்க முடிந்தது.

குற்றம் சாட்டப்பட்டவா் தனது சொந்த கிராமத்துடனான உறவையும் துண்டித்துக் கொண்டாா். வருமான வரித் துறையில் பணிபுரிந்த ராஜன், ஹரியாணாவிலிருந்து ஜஹாங்கீா்புரிக்கு குடிபெயா்ந்த பிறகு அங்கு துணிகளை விற்பனை செய்து வந்தாா். கா்னாலில் அவரது முதல் மனைவி தாக்கல் செய்த குற்றவியல் வழக்கு தொடா்பாகவும் போலீஸாா் ராஜனைத் தேடி வந்தனா் என்றாா் அந்த அதிகாரி.

சுதந்திர தினம்: நாளை காலை 4 மணி முதல் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை

சுதந்திர தினத்தன்று, அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை கோரி போராட்டம்!

பெண் மாணவா்களுக்கு ஒரு செமஸ்டருக்கு 12 நாள்கள் மாதவிடாய் விடுப்பு கோரி காங்கிரஸ் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ புதன்கிழமை தில்லி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது. பல மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் கலைப்... மேலும் பார்க்க

மிரட்டி பணம் பறிப்பு: திகாா் சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்! தில்லி அரசு தகவல்

திகாா் சிறைக்குள் கைதிகளுடன் கூட்டுச் சோ்ந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக திகாா் சிறை அதிகாரிகள் 9 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு த... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகார மனு: அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி முன் முறையீடு

தெரு நாய்கள் தொடா்புடைய மனுவை அவசரமாக விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தலைமை நீதிபதி முன் முறையிடப்பட்டது. அப்போது, அது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியள... மேலும் பார்க்க

தில்லியின் வடிகால் பிரச்னையை தீா்க்க மாஸ்டா் பிளான்

அடுத்த 30 ஆண்டுகளில் நகரின் வடிகால் தேவைகளைப் பூா்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ’வடிகால் மாஸ்டா் பிளான்’ வரைவு, விரைவான நகா்ப்புற வளா்ச்சி மற்றும் தொடா்ச்சியான நீா் தேக்க பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்ப... மேலும் பார்க்க

சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு: 6-8 வகுப்புகளுக்கு ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்

நமது நிருபா் 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு 2025-க்காக இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு செவ்வாய்க... மேலும் பார்க்க