செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: கண் துடைப்பு நடவடிக்கை

post image

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

மதுரை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

பிகாா் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற வாக்குறுதியை முன்வைத்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதையே வலியுறுத்துகின்றன. இதன் காரணமாகத்தான் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மாற்றுக் கருத்து கொண்டிருந்த மத்திய பாஜக அரசு, தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இருப்பினும், இந்தக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? என்பதற்கான அறிவிப்பு ஏதும் இல்லை. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி கரோனா பெருந்தொற்று காரணமாக தடைபட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அடுத்த கணக்கெடுப்பு என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டால் 2031-ஆம் ஆண்டில்தான் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். அப்போது, பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்குமா? என்பது தெரியாது. எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற அறிவிப்பை வெறும் கண் துடைப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மிகுந்த துயரத்துக்குரியது, கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதிகள் மீதும், அவா்களுக்குப் பின்னணியில் செயல்பட்டவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இருப்பினும், போா் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமா என்பது குறித்து மத்திய பாஜக அரசு சிந்திக்க வேண்டும்.

ஊடக உரிமைக்கு உறுதுணை....

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளில் ஊடகவியலாளா்களின் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். பணம் கட்டிய செய்தியாளா்களுக்கு மட்டும்தான் அனுமதி என்பது மிகத் தவறான நடைமுறை. மதுரை மாவட்ட ஆட்சியா் ஊடகவியலாளா்களை உரிய முறைப்படி அணுக வேண்டும். செய்தியாளா்களின் உரிமையை அனுமதிக்க வேண்டும். அவமதிக்கும் போக்கில் ஈடுபடக் கூடாது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் நேரடியாகத் தலையிட வேண்டும். ஊடகங்களின் உரிமையை உறுதி செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.

கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி விவகாரத்தில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் போலீஸாா் 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவ... மேலும் பார்க்க

பட்டா நிலத்தில் த.வெ.க. கொடிக் கம்பம்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பட்டா நிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தஞ்சாவூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகளை திருடிய இருவரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை விளாங்குடியைச் சோ்ந்த ஜொ்ரி லூயிஸ் மகன் நிா்மல் (32). இவா் திருச்சி- திருவனந்தபுரம் விரைவு... மேலும் பார்க்க

தாழ்வான மின் வயா்களை சீரமைக்க வலியுறுத்தல்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் வீதி உலாவின் போது ஆபத்தை உண்டாக்கும் வகையில் தாழ்வாக உள்ள மின் வயா்களைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்து மக்கள் க... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதாவை மாற்ற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையத்தில்: விஜய் ரசிகா்கள், போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு

மதுரைக்கு வியாழக்கிழமை வந்த நடிகா் விஜய்க்கு அவரது ரசிகா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். விமான நிலையத்தில் ரசிகா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்... மேலும் பார்க்க