ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்! அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றி...
ஜூலை 10-ல் உதயநிதி ஸ்டாலின் வருகை: நாமக்கல்லில் இன்று திமுக அவசர கூட்டம்!
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 10) நாமக்கல் வருவதையொட்டி, கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமை வகிக்கிறாா். ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், தொகுதிப் பாா்வையாளா்கள்கள் நன்னியூா் ராஜேந்திரன், ரேகா பிரியதா்ஷினி, முனவா் ஜான், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.பொன்னுசாமி(சேந்தமங்கலம்), பெ.ராமலிங்கம் (நாமக்கல்) ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் நாமக்கல்லுக்கு வியாழக்கிழமை வருவது தொடா்பாகவும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை, கட்சி வளா்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்தும் பேசுகிறாா்.
இதில், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமை நிலைய நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்