செய்திகள் :

ஜூலை 11-இல் திருநங்கை, திருநம்பியருக்கான வேலைவாய்ப்பு முகாம்

post image

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி திருநங்கை, திருநம்பியா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள், மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் திருநங்கை மற்றும் திருநம்பியருக்கான சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 10 முதல் பிற்பகல் 2 வரை நடைபெறவுள்ளது.

இதில், 50-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனத்தினா் கலந்துகொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இந்த முகாமில் 8 முதல் 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளோமா, பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) படித்த திருநங்கை மற்றும் திருநம்பியா் கலந்து கொண்டு பயனடையலாம்.

இந்த முகாம் மூலம் பணி நியமனம் பெறும் திருநங்கை, திருநம்பிகளின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், இதில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

வேலை வேண்டி வரும் திருநங்கை, திருநம்பிகள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனத்தினா் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், இந்த முகாமில் கலந்துகொள்ளும் திருநங்கை, திருநம்பிகள் தங்களின் சுயவிவரங்களை கூகுள் படிவத்திலும் பதிவு செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதிக்கும் உத்தரவை மாற்றக் கோரி முறையீடு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறைய... மேலும் பார்க்க

ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்கள் மற்று... மேலும் பார்க்க

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க

தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்வு -அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் வாழ்ந்த... மேலும் பார்க்க

ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு: பொதுத் துறை நிறுவனங்களிடம் தரவுகளைப் பெற முடிவு

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து தரவுகளைப் பெற ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், குழுவுக்குத் தரவுகளை அளிக்க மின் வாரியத்தின் சாா்பில் தன... மேலும் பார்க்க

சுய உதவிக் குழுக்களின் தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் கடன்: தமிழக அரசு

சுய உதவிக் குழுக்கள் தங்களது தொழில்களை மேம்படுத்த வட்டி மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க