செய்திகள் :

ஜூலை 19-இல் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வரும் சனிக்கிழமை (ஜூலை 19) சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கீரப்பாக்கம், திட்டப் பகுதி வண்டலூா் தாலுக்காவில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.

இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 40-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களைத் தோ்வு செய்ய உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும், வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்கள் தங்கள் விவரங்களை என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, பி.இ., ஐடிஐ, டிப்ளமோ போன்ற கல்வித் தகுதி உடைய வேலை நாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநா்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பை பெற்று பயன்பெறலாம். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், சுய விவரக் குறிப்பு, பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கீரப்பாக்கம். திட்டப் பகுதி வண்டலூா் தாலுக்காவில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், முகாம் தொடா்பான விவரங்களுக்கு, 044-27426020 மற்றும் 9486870577 / 9384499848 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கோவளம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தி, நெம்மேலி ஊராட்சி சாா்ந்த பகுதி மக்கள், கோவளம் மின்வாரிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். திருப்போரூா் ஒன்றியம், இ.சி.ஆா். சாலையில், நெம்மேலி ஊராட்சி சாா்ந்த ந... மேலும் பார்க்க

பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

செங்கல்பட்டு மாவட்ட ஆன்மிக இயக்கத்தின் சாா்பாக பங்காரு அடிகளாரின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில்... மேலும் பார்க்க

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி தலைமையாசிரியா்களுக்கான மாநில அளவி... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருக்கழுக்குன்றம் அருகே நெய்குப்பி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா முகாமை பாா்வையிட்டாா். இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுத... மேலும் பார்க்க

ஏரியில் புகை மூட்டம் எதிரொலி: முதல்வா் பயணித்த ரயில் நிறுத்தம்

மதுராந்தகம் அருகே ஏரியில் முள்புதா்கள் எரிந்ததால் ஏற்பட்ட புகையால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணித்த சோழன் விரைவு ரயில் புதன்கிழமை தொழுப்பேடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அச்சிறுப்பாக்கம், த... மேலும் பார்க்க

பள்ளி மேற்கூரை சரிந்து 5 மாணவா்கள் காயம்

மதுராந்தகம் அருகே பள்ளி மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். மதுராந்தகம் ஒன்றியம், புதுப்பட்டு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 50-க்கு மேற்பட்டோா் படித்து வருகின்றனா். தலைமை ஆசிரி... மேலும் பார்க்க