செய்திகள் :

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!

post image

நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அளவில் நடக்கிறது. மும்பையில் வசிக்கும் 70 வயது ஹிந்துஸ்தானி கிளாசிக் இசை பாடகர் ஒருவரை இது போன்று டிஜிட்டல் முறையில் கைது செய்து, ரூ.1.2 கோடியை மர்ம கும்பல் அபகரித்துள்ளது. மேற்கு புறநகரில் வசிக்கும் அந்த பாடகருக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி மர்ம நபர் ஒருவர் போன் செய்து வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களது வங்கிக் கணக்கோடு இணைந்த கிரெடிட் கார்டில் எடுக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை செலுத்தவில்லை என்று தெரிவித்தார். அதோடு இது குறித்து இன்ஸ்பெக்டரிடம் பேசுங்கள் என்று தெரிவித்து வேறு ஒருவருக்கு போனை டிரான்ஸ்பர் செய்தார்.

சித்திரிப்புப் படம்

அதில் பேசிய நபர் தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறினார். அதோடு முதியவரிடம், நீங்கள் பணமோசடியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள் என்று கூறினார். இம்மோசடி குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருக்கிறது என்று கூறி, சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகலையும் காட்டினார். மேலும் ரூ.300 கோடி பண மோசடியில் உங்களது வங்கிக் கணக்கு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மோசடி பணத்தில் 2 கோடி உங்களது வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே விசாரணை முடியும் வரை உங்களது கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படியும், விசாரணை முடிந்த பிறகு பணத்தை திரும்ப கொடுத்துவிடுவோம் என்றும் தெரிவித்தார்.

விசாரணை முடியும் வரை யாரிடமும் இது குறித்து பேசக் கூடாது என்றும், நீங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவீர்கள் என்று மோசடி பேர்வழி தெரிவித்தார். அதனை முதியவரும் நம்பிவிட்டார். போன் செய்த நபரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு தனது வங்கிக் கணக்கில் இருந்த பணம், பிக்சட் டெபாசிட்டில் இருந்த பணம் என மொத்தம் ரூ.1.2 கோடியை போனில் சொன்ன நபர் சொன்ன் வங்கி க்கணக்கிற்கு முதியவர் டிரான்ஸ்பர் செய்தார். அதன் பிறகுதான் தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை முதியவர் உணர்ந்தார். இதையடுத்து இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் ரூ.13 லட்சத்தை போலீஸார் மோசடி பேர்வழிகள் எடுக்க முடியாமல் பிளாக் செய்துவிட்டனர். இது தவிர முதியவர் செலுத்திய பணம் எந்த வங்கிக்கெல்லாம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளதோ அந்த வங்கிக்கணக்கெல்லாம் முடக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடியில் பாதிக்கப்படும் மக்கள் 1930 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து மும்பை போலீஸாரிடம் பேசியபோது தாங்கள் யாரையும் டிஜிட்டல் முறையில் கைது செய்வது கிடையாது என்று தெரிவித்தனர்.

`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்' - சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்

``கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்" என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.சுபாஷ் சந... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் இழப்பு... கொலைசெய்த கணவனைக் காட்டிக் கொடுத்த அரிவாள் வெட்டு!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவர், கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாரியம்மாள் ... மேலும் பார்க்க

சென்னை: IPL போட்டியின்போது செல்போன்கள் திருட்டு - ஏஐ தொழில்நுட்பத்தால் இளைஞர்கள் சிக்கியது எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்க... மேலும் பார்க்க

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித... மேலும் பார்க்க

Karnataka Bank Theft: 'Money Heist' பார்த்து SBI வங்கியை கொள்ளை அடித்த மதுரை கும்பல் - பகீர் பின்னணி

மதுரையைச் சேர்ந்த விஜய்குமார், அஜய்குமார் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா தாவங்கேர் மாவட்டத்தில் இருக்கும் நியாமதி தலுகாவிற்கு பிழைப்புக்காகச் சென்று ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளனர். கட... மேலும் பார்க்க

கிளாமர் காளி கொலையில் தேடப்பட்டவர்; வெள்ளைக்காளியின் கூட்டாளி - மதுரை என்கவுன்ட்டர் பின்னணி

மதுரையில் வி.கே.குருசாமி - ராஜபாண்டி தரப்பினருக்குள் நீண்டகாலமாக பகை தொடர்ந்து வருகிறது. இதில் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வந்த நிலையில், சில நாள்களுக்கு முன் குருசாமியின் உறவினர் கிளாமர் காளி என்ற... மேலும் பார்க்க