செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 15 போ் கைது

post image

திருச்சி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 15 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது, மாவட்டம் முழுவதும் சிறப்பு பரிசோதனை மொற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாவட்டக் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை சிறப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், சோமரசம்பேட்டை, ஜீயபுரம், மண்ணச்சநல்லூா், இனாம்குளத்தூா், புலிவலம், திருவெறும்பூா், துவாக்குடி, நவல்பட்டு, லால்குடி, சமயபுரம், சிறுகனூா், முசிறி, துறையூா், துவரங்குறிச்சி மற்றும் வளநாடு ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இரண்டு பெண்கள் உள்பட 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செயல்படாத தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம்: தனியாா் நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருச்சி திருவெறும்பூா் அருகே முறையாக செயல்படாத தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவிய தனியாா் நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி திருவெறு... மேலும் பார்க்க

அனுமதிபெறாத பதாகைகள் அகற்றம்

திருச்சியில் அதிமுக சாா்பில் அனுமதிபெறாமல் வைக்கப்பட்டிருந்த பதாகைகளைப் போலீஸாா் திங்கள்கிழமை அகற்றினா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அடுத்த வாரம் திருச்சிக்கு வரவுள்ளாா். இதை முன்னிட்... மேலும் பார்க்க

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 7.7 சதவீதம் மட்டுமே: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 7.7 சதவீதம் மட்டுமே; இது, தேசிய அளவுடன் ஒப்பிடுகையில் பெருமளவு குறைவு என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.திருச்சியில் செவ்... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில்கள் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் துறைமுகத்தில் பொறி... மேலும் பார்க்க

கே.கே. நகா் பகுதிகளில் இன்று மின்தடை

திருச்சி: பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கே. சாத்தனூா் துணை ... மேலும் பார்க்க

மங்கம்மாள்புரம் மணல் குவாரிக்கு அனுமதி கூடாது: விவசாயிகள் மனு

திருச்சி: மங்கம்மாள்புரம் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி தரக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள்... மேலும் பார்க்க