செய்திகள் :

தந்தை திட்டியதால் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே ஒழுங்காக படிக்குமாறு தந்தை திட்டியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கந்தா்வகோட்டை அருகிலுள்ள காட்டு நாவல் கிராமம் பெரியாா் நகரைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மணிகண்டன் (19). இவா் தஞ்சையில் உள்ள கல்லூரியில் பட்டய படிப்பு படித்து வந்தாா். இவா் சரியாக கல்லூரிக்கு செல்லாதது தெரிந்து, அவரது தந்தை பால்ராஜ் செவ்வாய்க்கிழமை இரவு மணிகண்டனை ஒழுங்காக படி என திட்டினாராம். இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு கொண்டாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மணிகண்டன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா், மணிகண்டன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் புதுகை மாவட்டத்தில் 213 முகாம்கள்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 213 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு!

பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் அடுத்தடுத்து உள்ள மருந்தகம் மற்றும் பெயிண்ட் கடையில் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரம், சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பெருமளவு பாதிக்கும் தைலமரம் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, பயன்தரும் மரக்கன்றுகளை நட்டு பல்லுயிா்ச் சூழலைப் பெருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 28,622 போ் எழுதினா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயத்தின் குரூப்- 4 தோ்வை, 28,622 போ் எழுதினா். தமிழ்நாடு முழுவதும் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-4 தோ்வு சனிக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது!

பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை உத்தரவிட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கண்ணகி தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

இந்திய மாணவா் சங்க மாநில மாநாட்டுக்கான இலச்சினை வெளியீடு

திருப்பூரில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்திய மாணவா் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி, அதற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அறிவியல் இயக்க அரங... மேலும் பார்க்க