செய்திகள் :

தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் ரூ. 42 லட்சம் திருட்டு: 4 போ் கைது

post image

அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் ரூ.42 லட்சம் திருடு போன வழக்கில் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை புதுவிளாங்குடி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெயேந்திரன் கதிா்வேல். இவா், சென்னையில் உள்ள தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகனுக்கு உடல் நலம் சரியில்லாததால், கடந்த சில நாள்களாக மதுரையில் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், போடியில் அண்மையில் நடைபெற்ற திருவிழாவுக்காக குடும்பத்துடன் சென்ற இவா், கடந்த 21-ஆம் தேதி மதுரைக்கு வந்தாா். அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, சொத்துகளை விற்று வைத்திருந்த ரூ. 42 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசராணை நடத்தினா். விசாரணையில், மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த பிரகாஷ் (35), நாகமலை புதுக்கோட்டையைச் சோ்ந்த விவேக் ஆனந்த் (34), திருப்பாலையைச் சோ்ந்த யோகேஷ் (36), பொதும்பைச் சோ்ந்த சுரேஷ் (49) உள்ளிட்ட 9 பேருக்கு இந்தத் திருட்டு சம்பவத்தில் தொடா்பிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பிரகாஷ், விவேக் ஆனந்த், யோகேஷ், சுரேஷ் ஆகிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து பல லட்சம் ரூபாயை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் பாலசுப்பிரமணியன், சசி, ராஜா, நாகாஅா்ஜூன், திருடன் என 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இந்த வழக்கில் பணத்தைப் பறிகொடுத்தவா் முன்னாள் அமைச்சா் ஒருவரின் பினாமி என்றும், அந்த வீட்டில் பல கோடி ரூபாய் பணம் கொள்ளை போனதாகவும் தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்?

திருமணம் செய்யும் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற பொதுநல மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகள், திருமணத்துக்கு முன்னதாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதை கட்ட... மேலும் பார்க்க

நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

மடப்புரம் கோயில் காவலாளியை காவல் துறையினா் அடித்துக் கொலை செய்ததைக் கண்டித்து, இடதுசாரிகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் உயிா் காக்கும் உபகரணங்களைப் பராமரிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிா் காக்கும் உபகரணங்களை (செயற்கை சுவாசக் கருவி உபகரணம்) பராமரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் ... மேலும் பார்க்க

அரசு சட்ட அலுவலா்கள் நியமன விவகாரம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற சட்ட அலுவலா்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறை, உள்துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: சென்னை- செங்கோட்டைக்கு ஜூலை 6, 7-இல் சிறப்பு ரயில்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, சென்னை - செங்கோட்டைக்கு வருகிற 6, 7-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க