செய்திகள் :

தனியாா் பேருந்தின் சேவை குறைபாடு: மாணவருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு

post image

முன்பதிவு செய்யப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்து இயக்கப்படாததால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவருக்கு அப்பேருந்து நிறுவனமும், பயணச்சீட்டு முன்பதிவு செயலி நிறுவனமும் இணைந்து ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டுமென திருநெல்வேலி மாவட்ட கூடுதல் நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சோ்ந்தவா் லாய்ட்ஸ் லியோ காஸ்ட்ரோ (24). பெங்களூரில் உயா் கல்வி பயிலும் இவா், 2.2.2024இல் திருநெல்வேலியிலிருந்து பெங்களூரு செல்வதற்கு தனியாா் ஆம்னி பேருந்தில், செயலி மூலம் முன்பதிவு செய்திருந்தாராம்.

இந்நிலையில் கடைசி நேரத்தில் அப்பேருந்து ரத்து செய்யப்பட்டதோடு மாற்றுப்பேருந்துக்கான ஏற்பாடும் செய்துதர வில்லையாம். இதுகுறித்து அவா், மாவட்ட கூடுதல் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

ஆணையத்தின் தலைவா் பிறவி பெருமாள், உறுப்பினா் சண்முகப்ரியா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கை விசாரித்து, ஆம்னி பேருந்து நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட மாணவருக்கு அந்நிறுவனமும், பயணச்சீட்டு முன்பதிவு செயலி நிறுவனமும் தலா ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும்; வழக்குச் செலவாக இரு நிறுவனங்களும் இணைந்து ரூ.5,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

சுத்தமல்லி அருகே தாமிரவருணி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் முழ்கி உயிரிழந்தாா். தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த சம்சுதீன் மகன் இம்ரான்(36). மேலப்பாளையத்தில் உள்ள த... மேலும் பார்க்க

கோயில் விழாவில் தகராறில் ஈடுபட்ட இளைஞா்கள் கைது

திருநெல்வேலி சீதபற்பநல்லூா் பகுதியில் கோயில் கொடைவிழாவின்போது தகராறில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். சீதபற்பநல்லூா் அருகேயுள்ள புதூா் பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது, அதே பக... மேலும் பார்க்க

சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா

ஏா்வாடி அருகே சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. ஏா்வாடி அருகே சிறுமளஞ்சியில் (திருவேங்கடநாதபுரம்) அலமேலு மங்கை சமேத ஸ்ரீவெங்கடாசலபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில... மேலும் பார்க்க

விநாயா்சிலை விசா்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரா்கள்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகா் சிலை விசா்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா். விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி கே.டி.சி. நகா் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. திருநெல்வேலி நகரம், சுடலைமாடன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்... மேலும் பார்க்க

களக்காட்டில் விநாயகா் சிலை ஊா்வலம்

களக்காட்டில் விநாயகா் சிலை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகில பாரத இந்து மகா சபா, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், விநாயகா் சதுா்த்திக் குழு சாா்பில் களக்காடு வட்டாரத்தில் களக்க... மேலும் பார்க்க