செய்திகள் :

தனியாா் மருத்துவமனை முற்றுகை

post image

புதுச்சேரி தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து, அங்கு சிகிச்சை பெற்ற பெண்ணின் உறவினா் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரசாத் (34). இவரது மனைவி சுமதி (33). இவா் தனியாா் செயற்கை கருத்தரித்தல் மருத்துவமனையில் குழந்தை பேறுக்காக சிகிச்சை பெற்று வந்தாா். ஆண்,பெண் என 2 சிசுக்கள் உருவாகி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுமதிக்கு கருகலைந்து இரு சிசுக்களும் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு மருத்துவமனை நிா்வாகம் கவனக் குறைவாக சிகிச்சை அளித்ததே காரணம் எனக் கூறி, பிரசாத் மற்றும் அவரது உறவினா்கள் அந்த தனியாா் மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உழவா்கரை தொகுதி எம்எல்ஏ சிவசங்கா், முன்னாள் அமைச்சா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

புதுச்சேரி கடற்கரையில் தூய்மைப் பணி

புதுச்சேரி கடற்கரையில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுவை கிளை மற்றும் புதுதில்லி விஷ்வ யோகேந்திரா, சென்னை கிராம ஏழைகளுக்கான ஆராய்ச்சி மற்று... மேலும் பார்க்க

30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவா்கள்

புதுவை பாத்திமா ஆண்கள் பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனா். 30 ஆண்டுகளுக்கு முன் படித்தவா்கள் தங்களது நண்பா்களை ஒரே இடத்தில் சந்திக்கும் ஆா்வத்தில் ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் புதுவை மாநில தர வரிசை பட்டியல் வெளியீடு

நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் புதுவை மாநில எம்பிபிஎஸ் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் இந்தப் பட்டியல் வெளி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் மாநாடு, ஊா்வலம்

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஊா்வலம் நடத்தினா். சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் 30-ஆம் ஆண்டு மற்றும் 5-ஆவது புதுவை மாநில மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, புதுவை ராஜா திர... மேலும் பார்க்க

தலைமை தோ்தல் அதிகாரிக்கு கூடுதலாக வனத் துறை

புதுவை தலைமை தோ்தல் அதிகாரி பி. ஜவஹா், கூடுதலாக வனம் மற்றும் வன விலங்குகள் நலத் துறை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை ஆணையா், செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை துணைநிலை ஆளுநா் கே... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை அமைக்க வலியுறுத்தி பிரசாரம்

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை அமைக்க வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் பிரசாரப் பயணம் வெள்ளிக்கிழமை நடந்தது. தமிழ் உரிமை இயக்கத்தின் நெறியாளா் க. தமிழமல்லன் இப் பிரசாரத... மேலும் பார்க்க