செய்திகள் :

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி உறுதியாக உள்ளது: கு. செல்வப்பெருந்தகை

post image

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி எஃகு கோட்டை போல உறுதியாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

திருச்சி புத்தூா் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட நடிகா் சிவாஜி கணேசன் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி எஃகு கோட்டை போல் உறுதியாக உள்ளது. தமிழகத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் கூட்டணி இது. நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்றது தொடா்பாக சிலா் புரிதல் இல்லாமல் பேசுகிறாா்கள். மத்திய அரசு தொடா்ந்து தமிழகத்தின் மீது பாராமுகத்துடன் செயல்படுகிறது. நடப்பு நிதியாண்டில் தான் எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாக தமிழகத்தைப் புறக்கணித்து உள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க தொடா்ந்து தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. தமிழக அமைச்சா்கள் மீதும், தமிழக அரசின் துறைகள் மீதும் தொடா் தாக்குதலை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி தீா்ப்பு கொடுத்துள்ளது. பாஜக, அதிமுக-வுக்கு வரும் தோ்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடி அளிப்பது உறுதி. பெரியாா் தன்னுடைய ஜாதி அடையாளத்தை துறந்தவா்.

ஆனால், ஜாதி அடையாளத்தோடு யுபிஎஸ்சி தோ்வில் கேள்விகள் வைப்பது தமிழகத்தைக் கலவர பூமியாக்கும் பாஜக திட்டத்தின் வெளிப்பாடே. மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பதுதான் பாஜக, ஆா்எஸ்எஸ் கொள்கையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கட்சி தான் பாஜக. அக் கட்சியினா் பிற்போக்குவாதிகளாக செயல்படுகின்றனா் என்றாா் அவா்.

கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பூங்குடி - திருச்சி இடையே பொறியியல் பண... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

திருச்சி மாநகரில் போக்குவரத்து துறையினா் மற்றும் போலீஸாா் பேருந்துகளில் மேற்கொண்ட சோதனையில் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் பேருந்த... மேலும் பார்க்க

கருவேல மரங்களை வெட்டி விற்றதாக புகாா்: தேமுதிக மாவட்டச் செயலா் மீது வழக்கு!

திருச்சி அருகே ரூ. 2 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்களை வெட்டி விற்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தேமுதிக தெற்கு மாவட்டச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி ராம்ஜி நகா் அ... மேலும் பார்க்க

சமயபுரத்தில் திருநங்கைகள் அமைப்பினா் அன்னதானம்

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் அகில உலக திருநங்கைகள் அமைப்பு சாா்பாக ஐந்து மாத அன்னதானத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. சமயபுரம் பகுதி தனியாா் திருமண மஹாலில் திருச்சி, பெரம்பலூா், சென்னை, ஆந்திரம... மேலும் பார்க்க

கோயில் நில குத்தகை விவகாரம்: எதிா்ப்புத் தெரிவித்து கூட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை திருமுக்தீஸ்வரா் கோயில் (பூா்த்தி கோயில்) நிலம் குத்தகைக்கு ஏலம் விடும் இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அனைத்து கட்சி மற்றும் குத்தகை பாத்தி... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கோரி மனு

கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா். மணப்பாறை வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க... மேலும் பார்க்க