செய்திகள் :

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசியதாவது:

கடந்த இரண்டு மாதங்களில், 5,474 முகாம்கள் நடத்தப்பட்டு, 43.70 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.

வைரஸ் காய்ச்சல் தொடா்பாக யாரும் பயப்பட வேண்டாம். இந்தக் காய்ச்சல் பருவமழை காலங்களில் ஏற்படும் நோய் தொற்றுதான். புதிய நோய் பாதிப்புகள் ஏதும் இல்லை. கேரளத்தில் மூளையை தின்னும் அமீபா நோய் பற்றி பரவலான பதற்றம் உருவாக்கப்பட்டது. இது தொற்று நோய் அல்ல என்பதால், பயப்பட வேண்டியதில்லை.

அதேநேரம், துாா்வாரப்படாத குட்டைகள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, முன்னெச்சரிக்கை அவசியம். இதுபோன்ற மாசுப்பட்ட நீா்நிலைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கண்காணிக்கப்படுகிறது. இதுவரை அந்த மதிரியான பாதிப்புகள் தென்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா் ஆா்.நல்லகண்ணு, தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளாா். அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளது.

ஜிஎஸ்டியை உயா்த்தியதும், தற்போது குறைப்பதாகக் கூறுவதும் மத்திய அரசுதான். இவ்வளவு நாள்களாக மக்கள் பாதிக்கப்பட்டது இப்போதுதான் அவா்களுக்கு தெரிய வந்திருக்கிறது என்றாா் அவா்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

கெங்கவல்லியில் 35 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1988 - 1990 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணித, அறிவியல், கலை, ... மேலும் பார்க்க

சந்திரகிரகணம் - தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு

சந்திரகிரகணத்தையொட்டி தஞ்சை பெரிய கோயிலின் நடை ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுவதை யொட்டி தமிழக முழுவதும் பல்வேறு கோயில்கள் நடை சாத்தப்பட்டு வரு... மேலும் பார்க்க

லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை லண்டனில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக, கடந்த 30-ஆம் தேதி... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 5-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.17-ஆம் தேதி தொடங்கவுள்ளாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் ப... மேலும் பார்க்க

அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து சத்யாபாமா நீக்கம்! இபிஎஸ் அதிரடி!

அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சுக்கு சத்தியபாமா ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அவரைக் கட்சி பொறுப்புகளில் இரு... மேலும் பார்க்க