திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குக்கு நிா்வாக அனுமதி பெறும் நிகழ்ச்சி
தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் இறைச்சி விற்பனை! - அரசு தகவல்
தமிழகம் முழுவதும் இனி ஒரே விலையில் இறைச்சி விற்கப்படும் என்றும் அதற்கான விலையை அரசே நிர்ணயிக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை வேப்பேரியில் தேசிய அளவிலான கால்நடை கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்வில் பேசிய கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் டாக்டர் என். சுப்பையன், "இனி தமிழகத்தில் ஆடு, கோழி போன்றவற்றின் விலையை அரசே தினமும் நிர்ணயிக்கும்.
முட்டை மற்றும் பிராய்லர் கோழி விலை மட்டுமின்றி, உயிருடன் விற்கப்படும் ஆடுகள், கோழிகளின் விலை மற்றும் அவற்றில் இருந்து கிடைக்கும் இறைச்சியின் விலையும் நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்படும். இதற்கான இணையதளம் தயாராகி வருகிறது.
விலையில் அரசு எதுவும் கட்டுப்பாடு விதிக்காது. மக்கள் இதன் மூலம் விலைகளைத் தெரிந்துகொள்வதுடன் பண்டிகை காலங்களில் அதிக விலைக்கு இறைச்சி விற்கப்படுவது தடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
Summary
TN govt has announced that meat will be sold at the same price throughout Tamil Nadu and that the price will be determined by the government itself.
இதையும் படிக்க | கவனச்சிதறல், மறதி பிரச்னையா? உங்களுக்கு 'பிரெயின் ஃபாக்' கோளாறு இருக்கலாம்!