செய்திகள் :

தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் இறைச்சி விற்பனை! - அரசு தகவல்

post image

தமிழகம் முழுவதும் இனி ஒரே விலையில் இறைச்சி விற்கப்படும் என்றும் அதற்கான விலையை அரசே நிர்ணயிக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை வேப்பேரியில் தேசிய அளவிலான கால்நடை கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்வில் பேசிய கால்நடை பராமரிப்புத் துறைச் செயலாளர் டாக்டர் என். சுப்பையன், "இனி தமிழகத்தில் ஆடு, கோழி போன்றவற்றின் விலையை அரசே தினமும் நிர்ணயிக்கும்.

முட்டை மற்றும் பிராய்லர் கோழி விலை மட்டுமின்றி, உயிருடன் விற்கப்படும் ஆடுகள், கோழிகளின் விலை மற்றும் அவற்றில் இருந்து கிடைக்கும் இறைச்சியின் விலையும் நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்படும். இதற்கான இணையதளம் தயாராகி வருகிறது.

விலையில் அரசு எதுவும் கட்டுப்பாடு விதிக்காது. மக்கள் இதன் மூலம் விலைகளைத் தெரிந்துகொள்வதுடன் பண்டிகை காலங்களில் அதிக விலைக்கு இறைச்சி விற்கப்படுவது தடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

Summary

TN govt has announced that meat will be sold at the same price throughout Tamil Nadu and that the price will be determined by the government itself.

இதையும் படிக்க | கவனச்சிதறல், மறதி பிரச்னையா? உங்களுக்கு 'பிரெயின் ஃபாக்' கோளாறு இருக்கலாம்!

நடிகர் ஜி. சீனிவாசன் காலமானார்

நடிகர் ஜி. சீனிவாசன் உடல்நலக் குறைவால் இன்று மதியம் காலமானார்.இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்கொண்ட ஜி. சீனிவாசன் (95) உடல்நலக் குறைவு காரணமாக சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கில் கிருஷ்ணா சிக்கியது எப்படி? - காவல் துறை விளக்கம்

கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸார் கடந்த திங்கள்கிழமை கைது செய்த நிலையில், இன்று(ஜூன் 26) நடிகர் கிருஷ்ணாவை சென்னை காவல்துறையினர் கைது செய்துனர்.இது குறித்து... மேலும் பார்க்க

பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க ஸ்டாலினுக்கு அவசியம் இல்லை! - இபிஎஸ்

முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை திர... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்ட ஊக்கத்தொகைக்கு யுபிஎஸ்சி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து ஊக்கத்தொகை பெற மதிப்பீட்டுத் தேர்வுக்கு யுபிஎஸ்சி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்!

வால்பாறையில் பெய்துவரும் கனமழையால் கருமலை இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில... மேலும் பார்க்க

ஆனி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்!

ஆனி மாதத்தில் சுபமுகூர்த்த தினத்தன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என்று பத்திரப் பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க