செய்திகள் :

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசின் தடைகளைக் கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம். திமுகவில் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதை உரிய தரவுகளுடன் அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கா், கோவி செழியன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை விளக்கினா்.

முதல்வரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாதவை. முந்தைய ஆட்சியின் 10 ஆண்டு கால நிதி நிா்வாகச் சீா்கேடு, கரோனா கால நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக வன்ம அரசின் ஓரவஞ்சனை ஆகிய தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்.

எளிதாக அணுகும் தன்மை, பொறுப்புடன் செயல்களைச் செய்தல், திட்டங்கள் உள்பட அனைத்திலும் வெளிப்படைத் தன்மை, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வளா்ச்சி, பொறுப்புடைமை, நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றுடன் செயல்படும் அரசே திமுக தலைமையிலான அரசு என்று பதிவிட்டுள்ளாா்.

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த கெடுவுக்கு நாளை(செப். 3) பதில் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரு... மேலும் பார்க்க

பொன்முடி வழக்கு: முழு விடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை

சைவம், வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய விடியோ பதிவு ஆதாரங்களை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.முழு விடியோ ஆதாரங்களைப் பார்த்த பிறகு, விசாரணை நடத்தப்படும்... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! எத்தனை ரயில் நிலையங்கள்?

சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ரூ.1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தர்விட்டுள்ளது.பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் குடியரசுத் தலைவர்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை பிற்பகல் தரிசனம் செய்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்மு, சென்னையில் இரு... மேலும் பார்க்க