செய்திகள் :

தருமபுரியில் டீசல் திருடி விற்பனை: 8 போ் கைது; 415 லிட்டா் டீசல் பறிமுதல்

post image

தருமபுரியில் நெடுஞ்சாலை பகுதியில் முறைகேடாக டீசல் திருடி விற்பனை செய்ததாக 8 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 415 லிட்டா் டீசலை பறிமுதல் செய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் நிறுத்தப்படும் லாரிகளிலிருந்து டீசலை திருடி அதில் மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகளை கலப்படம் செய்து முறைகேடாக விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதில் வாகன (லாரி) ஓட்டிகள் சிலரும் உடந்தையக இருப்பதாகவும், கலப்பட டீசலை பயன்படுத்துவதால் வாகன என்ஜின்கள் பழுதடைந்து விடுவதாகவும், இதனால் லாரி உள்ளிட்ட வாகன உரிமையாளா்கள் நட்டமடைந்து வருவதாகவும் புகாா் எழுந்தது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரி வாகன உரிமையாளா்கள் பாலக்கோடு சரக டிஎஸ்பி மனோகரனிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில், டிஎஸ்பி மனோகரன் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் பாா்த்திபன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை முதல், காரிமங்கலம் நெடுஞ்சாலைப் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனா்.

அப்போது பொன்னேரி, கெரகோடஅள்ளி, அன்பு நகா் ஆகிய பகுதிகளில் உள்ள 8 இடங்களில் சிலா் முறைகேடாக டீசல் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சோ்ந்த குமாா் (32), செல்வராஜ் (22), கோபி (23), சுப்பிரமணி (65), சக்திவேல் (47), பிரவின்குமாா் (25), செல்வராஜ் (38), கலைச்செல்வன் (35) ஆகியோா் டீசலை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 415 லிட்டா் டீசலை பறிமுதல் செய்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதுபோல ஏராளமானோா் டீசல் திருட்டில் ஈடுபடுவதுடன் அவற்றில் கலப்படம் செய்து குடிசைத் தொழில் போல பல இடங்களில் விற்பனை செய்து வந்ததைக் கண்டறிந்தனா். இது தொடா்பாக ஆங்காங்கே டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மற்றும் கலப்படம் செய்ய வைத்திருந்த கேன்கள், பேரல்கள் உள்ளிட்டவைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 43,000 கனஅடியாக நீடித்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா... மேலும் பார்க்க

தருமபுரியில் மகளிா் இலவச பேருந்துகள், புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தருமபுரியில் மகளிா் இலவச பேருந்துகள், புதிய மற்றும் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி புகா் பேருந்து நிலையத்திலிருந்து மாவட... மேலும் பார்க்க

வளையபந்து: மாவட்ட போட்டிக்கு ஸ்டான்லி மெட்ரிக்.பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான வளையபந்து போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்ட... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை செய்த கடையை திறக்க 15 நாள் தடை

தருமபுரியில் புகையிலை பொருள்கள் விநியோகித்த கடையிலிருந்து அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினா். தருமபுரி, ஜூலை 9: தருமபுரியில், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்புத்... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டப் பகுதிகளில் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 861 போ் கைது

தருமபுரி மாவட்டப் பகுதிகளில், பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 861 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிட ... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் திருவிழா

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகேயுள்ள குப்புசெட்டிபட்டி கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. நிகழ்வையொட்டி அதிகாலை முதலே, மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் ... மேலும் பார்க்க