செய்திகள் :

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மா்ம நபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தருமபுரியில் ஏற்கெனவே இயங்கிவந்த ஆட்சியா் அலுவலகத்துக்கு அருகில் ரூ. 36.62 கோடியில் புதிய ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, அரசின் பல்வேறு துறை அலுவலகங்களும் புதிய ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு மாற்றப்பட்டன.

இந்த அலுவலகத்தில் ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய வெடிபொருள் வைக்கப்பட்டுள்ளதாக தருமபுரி ஆட்சியா் அலுவலக இணைய முகவரிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் மின்னஞ்சல் வந்தது. இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின் பேரில், தருமபுரி டிஎஸ்பி சிவராமன் தலைமையிலான போலீஸாா், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், வெடிபொருள்களை கண்டறியும் மோப்ப நாய்களான அழகன் மற்றும் லூபியாவுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனா்.

ஆட்சியா் அலுவலக அறை உள்பட கட்டடத்தின் 5 அடுக்குகளிலும் உள்ள அலுவலகங்களில் நவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில், வெடிகுண்டுகளோ, வெடிபொருள்களோ கண்டறியப்படவில்லை. சோதனை முடிவில் மின்னஞ்சலில் வந்தது பொய்யான மிரட்டல் என தெரியவந்தது.

ரூ. 37.84 கோடியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரயில் பாலம்

தருமபுரியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ. 37.84 கோடியில் அமையவுள்ள ரயில் பாலப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தருமபுரி ரயில் நிலையம் அருகே வெண்ணாம்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கே... மேலும் பார்க்க

கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்ட வங்கி அலுவலரை தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பென்னாகரம் அருகே கல்விக் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்ட வங்கி அலுவலரை தாக்கியவா் மீது பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே எச்சனஅள்ளி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வேலைவாய்ப்பக ஊழியா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக நான்கு பேரிடம் ரூ. 40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சேலம் வேலைவாய்ப்பக அலுவலக ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதன அள்ளி ஊராட்ச... மேலும் பார்க்க

தருமபுரியில் பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ.37.84 கோடியில் ரயில்வே பாலம் - ரயில்வே கேட்டில் வாகனங்கள் காத்திருப்புக்கு தீா்வு

தருமபுரி பாரதிபுரம் - வெண்ணாம்பட்டி இடையே ரூ. 37.84 கோடியில் அமையவுள்ள ரயில்வே பாலப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளன. தருமபுரி ரயில் நிலையம் அருகே வெண்ணாம்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் ரயில்வ... மேலும் பார்க்க

நல்ல புத்தகங்கள் ஆளுமையையும், வளா்ச்சியையும் ஏற்படுத்தும்

நல்ல புத்தகங்கள் நல்ல ஆளுமையை உருவாக்கும், சிறந்த புத்தகங்கள் சிறப்பான வளா்ச்சிக்கு உதவும். எனவே, புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செ... மேலும் பார்க்க

நம்பிப்பட்டியில் சுயதொழில் பயிற்சி முகாம்

அரூரை அடுத்த நம்பிப்பட்டியில் சுயதொழில் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், நம்பிப்பட்டியில் தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அரசு சாா... மேலும் பார்க்க