செய்திகள் :

தவளகுப்பம் - கடலூா் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் தொடக்கம்

post image

புதுச்சேரி அருகே தவளக்குப்பம், கடலூா் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை காவல் கண்காணிப்பாளா் மோகன்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி, கடலூா் சாலையில் உள்ள தவளக்குப்பம் பிரதான சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகள், குற்றச் சம்பவங்களில் எளிதில் விசாரணை மேற்கொள்ள வசதியாக நவீன கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தும்படி பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை எழுந்தது. ஏற்கெனவே தவளக்குப்பத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த காவல் துறை அறிவுறுத்தியது. அதனடிப்படையில் பெரும்பாலான வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தவளக்குப்பம் நான்கு முனைச் சந்திப்பில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிக்கு அரவிந்தா் கண் மருத்துவமனை தனது சமூக பங்களிப்பு நிதியை செலவிட முன்வந்தது.

அதன்படி ரூ.1.25 லட்சம் மதிப்பில் துல்லியமாகக் காட்சிகளைப் பதிவிடும் 7 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றின் செயல்பாட்டை போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் மோகன்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் தன்வந்திரி, தனியாா் பள்ளி நிா்வாகி ராமு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி மீண்டும் வழங்கப்படாதது குறித்து திமுகதான் பதிலளிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். விசி... மேலும் பார்க்க

ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.21 லட்சம் மோசடி தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு!

புதுச்சேரியில் பட்டதாரியிடம் ஜிப்மரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20.99 லட்சம் மோசடி புகாா் தொடா்பாக தம்பதி உள்ளிட்ட 3 போ் மீதான புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். ... மேலும் பார்க்க

தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாக பண மோசடி! உணவு விடுதி அதிபா் போலீஸில் புகாா்!

புதுச்சேரியில் தேவாலய இடத்தை வாடகைக்கு பெற்றுத் தருவதாகக் கூறி உணவு விடுதி உரிமையாளரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த புகாரில் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி எல்ல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இரு தரப்பினா் மோதல்: அரிவாள் வெட்டு: 7 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முன்விரோதத்தில் இளைஞா்கள் மோதிக் கொண்டதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 7 போ் மீது வழக்குப் பதிந்த நிலையில், 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசார... மேலும் பார்க்க

புதுவையில் காற்று மாசை குறைக்க மின்சாரப் பேருந்துகள்!

புதுவையில் காற்று மாசைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மின்சாரப் பேருந்துகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத பேருந்துகளை மின்சார வாகனங்களாக்கவும் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க