செய்திகள் :

தாக்குதல் அச்சம்: கராச்சி, லாகூா் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

post image

கராச்சி, லாகூா் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கராச்சி, லாகூா் நகரங்கள் இரண்டுமே இந்திய எல்லையில் இருந்து அருகில் உள்ள முக்கிய நகரங்களாகும். இந்தியா வான் தாக்குதல் நடத்தும் அச்சத்தின் காரணமாகவே பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே, ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்கு விமான சேவைகளை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துவிட்டது. இந்தியா எந்த நேரத்திலும் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் அமைச்சரும் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்’ நாளிதழில் விமானப் போக்குவரத்து ஆணையத்தை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட செய்தியில், ‘கராச்சி, லாகூா் நகரங்களின் வான் பரப்பின் குறிப்பிட்ட பகுதிகள் மே 1 முதல் 31-ஆம் தேதி வரை காலை 4 மணி முதல் 8 மணி வரை மூடப்படும். இது பயணிகள் விமானப் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நேரத்தில் பயணி விமானங்கள் குறிப்பிட்ட வான்பரப்பை பயன்படுத்தாமல் வேறு பாதைகளில் பயணிக்கும். இது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

இது தவிர நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் தீவிர முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

டிக்டாக் செயலிக்கு ரூ.5 லட்சம் கோடி அபராதம்!

டிக்டாக்கின் செயலிக்கு 600 மில்லியன் டாலர் அபராதம் விதித்து, ஐரோப்பிய அரசு உத்தரவிட்டது.சீனாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் நிறுவனம், தங்கள் பயனர்களின் தரவுகள் எங்கு அனுப்பப்படுகிறது என்பத... மேலும் பார்க்க

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் சோவியத் கால விண்கலம்!

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் கால விண்கலம் விரைவில் பூமியில் விழும் என எதிர்பார்க்கபடுகிறது.சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப்போர் நிலவிய காலத்தில்,... மேலும் பார்க்க

இந்திய யூடியூபர்களுக்கு ரூ. 21,000 கோடி!

கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்களுக்கு ரூ. 21,000 கோடி அளித்துள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்றைய உலகில் ஒரு வருமானம் மட்டும் போதாது என்று அறிந்த பலரும், யூடியூப் சேனல்களை ஆரம்பித்து, ... மேலும் பார்க்க

ஒரே இரவில் உக்ரைனின் 121 டிரோன்களை வீழ்த்திய ரஷியா!

ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பறந்த உக்ரைனின் 121 டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.கருங்கடல் பகுதியில் ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிரிமியா நிலப்பகுதி மற்றும் அந்நாட்டின் த... மேலும் பார்க்க

ஒரு கொரில்லாவை 100 மனிதர்கள் வீழ்த்த முடியுமா? இணையத்தைக் கலக்கும் விமர்சனங்கள்!

ஒரு கொரில்லாவை 100 மனிதர்கள் வீழ்த்த முடியுமா என்ற எக்ஸ் தளப் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.மனிதர்கள் 100 பேர் சேர்ந்து, ஒரு கொரில்லாவை வெல்ல முடியுமா என்று உலகப் பு... மேலும் பார்க்க

அமெரிக்காவின் மிரட்டல் பலிக்காது: சீனா

அமெரிக்காவின் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கப்படுவதாக சீனா தெரிவித்தது.வரி விதிப்பு குறித்து சீனாவுடன் அமெரிக்கா நடத்த விரும்பும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக சீன ... மேலும் பார்க்க